என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்தியபிரதேசத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சியா?
Byமாலை மலர்1 Dec 2018 11:19 PM GMT (Updated: 1 Dec 2018 11:19 PM GMT)
மத்தியபிரதேசத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்துக்கு 2 பேர் கொண்டு செல்வது போன்ற வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. #MadhyaPradesh #VotingMachine
சத்னா:
230 உறுப்பினர்களை கொண்ட மத்தியபிரதேச மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 28-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. வருகிற 11-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருப்பதால், வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் சத்னா என்ற இடத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு சில பெட்டிகளை 2 பேர் கொண்டு செல்வது போன்ற வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. பகுஜன் சமாஜ் வேட்பாளர் புஷ்கர் சிங் தோமர் உடனே கட்சி நிர்வாகிகளுடன் அங்கு சென்றார். காங்கிரஸ் கட்சியினரும் அங்கு திரண்டனர். ஆளும் பாரதீய ஜனதா கட்சியினர் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்து, மின்னணு எந்திரங்கள் எதுவும் மாற்றப்படவில்லை என்றும், வாக்குப்பதிவுக்கு பின் உபரியாக இருந்த எந்திரங்கள் அங்கு கொண்டு வரப்பட்டதாகவும் விளக்கம் அளித்தனர். இதைத்தொடர்ந்து அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. #MadhyaPradesh #VotingMachine
230 உறுப்பினர்களை கொண்ட மத்தியபிரதேச மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 28-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. வருகிற 11-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருப்பதால், வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் சத்னா என்ற இடத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு சில பெட்டிகளை 2 பேர் கொண்டு செல்வது போன்ற வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. பகுஜன் சமாஜ் வேட்பாளர் புஷ்கர் சிங் தோமர் உடனே கட்சி நிர்வாகிகளுடன் அங்கு சென்றார். காங்கிரஸ் கட்சியினரும் அங்கு திரண்டனர். ஆளும் பாரதீய ஜனதா கட்சியினர் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்து, மின்னணு எந்திரங்கள் எதுவும் மாற்றப்படவில்லை என்றும், வாக்குப்பதிவுக்கு பின் உபரியாக இருந்த எந்திரங்கள் அங்கு கொண்டு வரப்பட்டதாகவும் விளக்கம் அளித்தனர். இதைத்தொடர்ந்து அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. #MadhyaPradesh #VotingMachine
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X