என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சபரிமலையில் போலீசார் வன்முறை - கேரள டிஜிபிக்கு ஐகோர்ட்டு கண்டனம்
Byமாலை மலர்31 Oct 2018 6:05 AM GMT (Updated: 31 Oct 2018 6:05 AM GMT)
சபரிமலையில் வன்முறையில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேரள டிஜிபிக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. #SabarimalaTemple #KeralaHighCourt
திருவனந்தபுரம்:
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு ஐயப்ப பக்தர்களிடம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கேரளாவில் ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர், பா.ஜனதா, காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டபோது சபரிமலைக்கு செல்ல முயன்ற இளம்வயது பெண்களை போராட்டக்காரர்கள் விரட்டியடித்தனர்.
இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சபரிமலையில் மோதல் ஏற்பட்டு போர்க்களமாக மாறியது. இந்த போராட்டத்தின் போது ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை போலீசார் அடித்து உடைத்ததாகவும், பக்தர்கள் மீது கல்வீச்சில் போலீசார் ஈடுபட்டதாகவும் கூறி அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சபரிமலை ஆச்சார பாதுகாப்பு அமைப்பு தலைவர் அனோஜ் குமார் என்பவர் கேரள ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சபரிமலையில் இளம்வயது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து அமைதியான வழியில் போராடிய ஐயப்ப பக்தர்களிடம் போலீசார் அத்துமீறி நடந்து கொண்டனர். சபரிமலையில் பக்தர்களின் வாகனங்களை போலீசாரே அடித்து உடைத்துள்ளனர். அவர்கள் பக்தர்கள் மீது கல்வீசியும் தாக்குதல் நடத்தினார்கள். இதுபோன்ற வன்முறை செயல்களில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி உள்ளார்.
மேலும் அவர் போலீசார் வன்முறையில் ஈடுபட்டதற்கான வீடியோ காட்சிகளையும் அந்த மனுவுடன் இணைத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சபரிமலையில் வன்முறையில் ஈடுபட்ட போலீசார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காததற்காக கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவுக்கு கண்டனம் தெரிவித்தார். அவர் தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
உலகம் தற்போது எவ்வளவோ வளர்ச்சி அடைந்துவிட்டது. மனித சமூகமும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நாகரீக உலகில் சபரிமலையில் போலீசார் காட்டுமிராண்டித்தனமாக செயல்பட்டது வேதனை அளிக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வீடியோ காட்சிகளை பார்க்கும் போது போலீசார் இன்னும் பழைய காலத்திலேயே இருக் கிறார்கள் என்பது தெளிவாகிறது. வன்முறையில் ஈடுபட்ட போலீசார் மீது டி.ஜி.பி. உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #SabarimalaTemple #KeralaHighCourt
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு ஐயப்ப பக்தர்களிடம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கேரளாவில் ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர், பா.ஜனதா, காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டபோது சபரிமலைக்கு செல்ல முயன்ற இளம்வயது பெண்களை போராட்டக்காரர்கள் விரட்டியடித்தனர்.
இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சபரிமலையில் மோதல் ஏற்பட்டு போர்க்களமாக மாறியது. இந்த போராட்டத்தின் போது ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை போலீசார் அடித்து உடைத்ததாகவும், பக்தர்கள் மீது கல்வீச்சில் போலீசார் ஈடுபட்டதாகவும் கூறி அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சபரிமலை ஆச்சார பாதுகாப்பு அமைப்பு தலைவர் அனோஜ் குமார் என்பவர் கேரள ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சபரிமலையில் இளம்வயது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து அமைதியான வழியில் போராடிய ஐயப்ப பக்தர்களிடம் போலீசார் அத்துமீறி நடந்து கொண்டனர். சபரிமலையில் பக்தர்களின் வாகனங்களை போலீசாரே அடித்து உடைத்துள்ளனர். அவர்கள் பக்தர்கள் மீது கல்வீசியும் தாக்குதல் நடத்தினார்கள். இதுபோன்ற வன்முறை செயல்களில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி உள்ளார்.
மேலும் அவர் போலீசார் வன்முறையில் ஈடுபட்டதற்கான வீடியோ காட்சிகளையும் அந்த மனுவுடன் இணைத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சபரிமலையில் வன்முறையில் ஈடுபட்ட போலீசார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காததற்காக கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ராவுக்கு கண்டனம் தெரிவித்தார். அவர் தனது தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
உலகம் தற்போது எவ்வளவோ வளர்ச்சி அடைந்துவிட்டது. மனித சமூகமும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நாகரீக உலகில் சபரிமலையில் போலீசார் காட்டுமிராண்டித்தனமாக செயல்பட்டது வேதனை அளிக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வீடியோ காட்சிகளை பார்க்கும் போது போலீசார் இன்னும் பழைய காலத்திலேயே இருக் கிறார்கள் என்பது தெளிவாகிறது. வன்முறையில் ஈடுபட்ட போலீசார் மீது டி.ஜி.பி. உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #SabarimalaTemple #KeralaHighCourt
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X