search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரட்டாசி மாத பூஜை நிறைவு - சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடைப்பு
    X

    புரட்டாசி மாத பூஜை நிறைவு - சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடைப்பு

    புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு பெற்றதையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்றிரவு 10.30 மணியளவில் அடைக்கப்பட்டது. #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 5 நாட்களாக சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு அதிக பொருட்செலவில் நடத்தப்படும் படி பூஜை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

    புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு நாளான நேற்று சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இரவு 10.30 மணிக்கு அடைக்கப்பட்டது.

    மீண்டும் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அக்டோபர் மாதம் 17-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 22-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். இந்நாட்களில், தேவ பிரசன்ன பரிகாரத்தின் படி கூவி அழைத்து பிராயசித்தம் செய்யும் சிறப்பு வழிபாடு நடத்தப்படும் என்று தந்திரி கண்டரரு ராஜீவரு தெரிவித்தார். #Sabarimala
    Next Story
    ×