search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி ஸ்வகா. முதல் - மந்திரிக்கு எழுதிய கடிதம்.
    X
    மாணவி ஸ்வகா. முதல் - மந்திரிக்கு எழுதிய கடிதம்.

    கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி

    கேரள வெள்ள நிவாரண பணிகளுக்காக பிளஸ்-1 மாணவி ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கி உள்ளார். #Keralasouthwestmonsoon #Keralarain

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூரை சேர்ந்தவர் சங்கரன். இவரது மகள் ஸ்வகா (வயது 16). அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    கேரளாவில் பெய்த பலத்த மழையால் பெரும் சேதம் ஏற்பட்டது. பலகோடி இழப்பு ஏற்பட்டத்தையொட்டி அரசு பெரும் தொகை எதிர்பார்த்துள்ளது. இந்நிலையில் கேரள முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு பல்வேறு இடங்களில் இருந்து நிதி அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த தகவல் மாணவி ஸ்வகாவுக்கு தெரியவந்தது. தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். தனது தந்தை தனக்கு எழுதி வைத்த 1 ஏக்கர் நிலத்தை நிவாரணமாக வழங்க முடிவு செய்தார். இது குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினார்.

    கடிதத்தை படித்த முதல்-மந்திரி நெகிழ்ச்சியடைந்து பாராட்டினர். நிவாரணத்தை கண்ணூர் கலெக்டரிடம் ஒப்படைக்கும்படி கூறினார். இதனையடுத்து மாணவி கண்ணூர் கலெக்டர் முகமது அலியிடம் தனது 1 ஏக்கர் நிலத்தை நிவாரணத்துக்கு வழங்கினார்.

    மாணவி வழங்கிய ஒரு ஏக்கர் நிலம் ரூ.2 கோடிக்கு மேல் இருக்கும் என்று ரியல் எஸ்டேட் அதிபர்கள் கூறினர்.

    Next Story
    ×