search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    28 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 77 வயது பூசாரி மகாராஷ்டிராவில் கைது
    X

    28 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 77 வயது பூசாரி மகாராஷ்டிராவில் கைது

    மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் 28 வயது பெண்ணை கோவில் வளாகத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 77 வயது சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். #Maharashtra #TemplePriestArrested
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள கோல்சேவாடி என்ற பகுதியில் வசிக்கும் பெண், தமக்கு அடிக்கடி தலைவழி வருவதாக தனது அண்டை வீட்டு தோழியிடம் கூறியுள்ளார். அதற்கு அப்பகுதியில் இருக்கும் கோவில் பூசாரி தீரா நோய்களையும் தீர்த்து வைப்பதாகவும், அவரை சென்று சந்திக்கும்படியும் தோழி அறிவுரை கூறியுள்ளார்.

    இதையடுத்து, தனது கணவருடன் அந்த பெண் கோவில் பூசாரியை சென்று சந்தித்தார். கோவிலில் உள்ள ஒரு அறையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, அந்த பெண்ணின் கணவரை பூஜைக்கு வேண்டிய பழங்கள் வாங்கிவருமாறு சாமியார் உத்தரவிட்டு அனுப்பி வைத்துள்ளார்.

    அதன்பிறகே அவரது உண்மை முகம் அந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. கணவர் சென்ற பிறகு அந்த பெண்ணிடம் தகாத  முறையில் நடந்திருக்கிறார் அந்த 77 வயது சாமியார்.

    இதையடுத்து, அந்த பெண் அப்பகுதியில் இருந்த காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே, அந்த புகாரின் அடிப்படையில் அந்த சாமியார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இதுபோன்ற பூசாரியின் லீலைகள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். #Maharashtra #TemplePriestArrested
    Next Story
    ×