என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநிலங்களவை துணை சபாநாயகர் பதவிக்கு 9-ம் தேதி தேர்தல்
Byமாலை மலர்6 Aug 2018 9:19 AM GMT (Updated: 6 Aug 2018 9:19 AM GMT)
பாராளுமன்ற மாநிலங்களவை துணை சபாநாயகர் பதவிக்கு வரும் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என சபாநாயகர் வெங்கயா நாயுடு இன்று தெரிவித்துள்ளார். #RSdeputychairman #RSdeputychairmanelection
புதுடெல்லி:
பாராளுமன்ற மாநிலங்களவையின் சபாநாயகராக துணை ஜனாதிபதி பதவி வகிப்பது மரபாக உள்ளது. துணை சபாநாயகர் பதவிக்கு அவையின் எம்.பி.க்கள் பலத்துக்கேற்ப வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவது வழக்கம்.
அறிவிக்கப்பட்ட நபரை எதிர்த்து மாற்று கட்சி வேட்பாளர் சில வேளைகளில் நிறுத்தப்பட்டு, அதிகமான வாக்குகளை பெறுபவர் வெற்றிபெற்று மாநிலங்களவை துணை சபாநாயகராக பதவி ஏற்பார்.
சில வேளைகளில் அனைத்து கட்சிகளின் சார்பிலும் ஆலோசித்து, ஒருமித்த முடிவுடன் பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டு துணை சபாநாயகராக பதவி ஏற்பதும் உண்டு.
இந்நிலையில், துணை சபாநாயகராக இருமுறை பதவி வகித்த பி.ஜே.குரியன் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதம் இரண்டாம் தேதியுடன் முடிவடைந்தது.
இதையடுத்டு, துணை சபாநாயகர் பதவிக்கு அனைத்து கட்சிகளின் சார்பாக ஒரு பொது வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என டெல்லி அரசியல் வட்டாரங்கள் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில், இன்றைய மாநிலங்களவை கூட்டத்தின்போது துணை சபாநாயகர் தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் வெங்கயா நாயுடு தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள நபர்கள் இந்த பதவிக்கு பெயர்களை முன்மொழியலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாமல் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படாமல் போனால், வழக்கம்போல் இந்த முறையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் இந்த பதவிக்கு வரும் வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. #RSdeputychairman #RSdeputychairmanelection
பாராளுமன்ற மாநிலங்களவையின் சபாநாயகராக துணை ஜனாதிபதி பதவி வகிப்பது மரபாக உள்ளது. துணை சபாநாயகர் பதவிக்கு அவையின் எம்.பி.க்கள் பலத்துக்கேற்ப வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவது வழக்கம்.
அறிவிக்கப்பட்ட நபரை எதிர்த்து மாற்று கட்சி வேட்பாளர் சில வேளைகளில் நிறுத்தப்பட்டு, அதிகமான வாக்குகளை பெறுபவர் வெற்றிபெற்று மாநிலங்களவை துணை சபாநாயகராக பதவி ஏற்பார்.
சில வேளைகளில் அனைத்து கட்சிகளின் சார்பிலும் ஆலோசித்து, ஒருமித்த முடிவுடன் பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டு துணை சபாநாயகராக பதவி ஏற்பதும் உண்டு.
இப்படி, மாநிலங்களவையில் அதிக உறுப்பினர்களின் பலத்துடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்தான் அதிக முறை துணை சபாநாயகராக பொறுப்பு வகித்து வந்துள்ளனர்.
இதையடுத்டு, துணை சபாநாயகர் பதவிக்கு அனைத்து கட்சிகளின் சார்பாக ஒரு பொது வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என டெல்லி அரசியல் வட்டாரங்கள் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில், இன்றைய மாநிலங்களவை கூட்டத்தின்போது துணை சபாநாயகர் தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் வெங்கயா நாயுடு தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள நபர்கள் இந்த பதவிக்கு பெயர்களை முன்மொழியலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாமல் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படாமல் போனால், வழக்கம்போல் இந்த முறையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் இந்த பதவிக்கு வரும் வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. #RSdeputychairman #RSdeputychairmanelection
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X