search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தம்பதிகள் போலீசில் சரண்
    X

    தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தம்பதிகள் போலீசில் சரண்

    ஒடிசா மாநிலத்தில், தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த தம்பதிகள் போலீசாரிடம் சரணடைந்தனர். #Maoist
    புபனேஷ்வர் :

    ஒடிசா மாநிலத்தில், மால்கங்கிரி மாவட்டம் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள காவல் நிலையத்தில், மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த முகேஷ் மற்றும் ரத்னா தம்பதியர் மீது 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக முகேஷ் மற்றும் ரத்னா தம்பதியரின் தலைக்கு முறையே ரூ.4 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், மாநில அரசு அறிவித்துள்ள சரண் அடைபவர்களுக்கான சிறப்பு திட்டத்தின்படி மவோயிஸ்ட் தம்பதியர் இருவரும் போலீசாரிடம் சரண் அடைந்துவிட்டதாக மால்கங்கிரி மாவட்ட எஸ்.பி.மீனா தெரிவித்துள்ளார்.

    வன்முறை வாழ்க்கையை துறந்துவிட்டு சரணடைந்ததால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகையான ரூ.5 லட்சத்தை போலீசார் தம்பதியரிடம்  வழங்கினர் . #Maoist
    Next Story
    ×