search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலப்புரம் அருகே குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
    X

    மலப்புரம் அருகே குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

    கேரளாவில் குளத்தில் மூழ்கி பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் திருநாவாய் பகுதியை சேர்ந்தவர் காரீப். இவரது மகன் ஆசிக் அலி (16). அதே பகுதியை சேர்ந்த ஷாபி மகன் முகம்மது அர்ஷாத் (16).

    இவர்கள் இருவரும் காரத்துரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர். நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

    வரும் வழியில் அங்குள்ள குளத்தில் இறங்கி குளித்தனர். அப்போது இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர். அவர்கள் தங்களை காப்பாற்றும்படி சத்தம் போட்டனர்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து திரூர் போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரில் தத்தளித்த மாணவர்கள் இருவரையும் மீட்டு திரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிறிது நேரத்தில் மாணவர்கள் இருவரும் இறந்தனர். இது குறித்து திரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×