search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மசாஜ் பார்லரில் விபச்சாரம்- அரியானாவில் தாய்லாந்து பெண்கள் உள்பட 15 பேர் கைது
    X

    மசாஜ் பார்லரில் விபச்சாரம்- அரியானாவில் தாய்லாந்து பெண்கள் உள்பட 15 பேர் கைது

    அரியானா மாநிலத்தில் மசாஜ் பார்லரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட தாய்லாந்து நாட்டை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 15 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
    சண்டிகர் :

    அரியானா மாநிலம், குருகிராம் பகுதியில் உள்ள மசாஜ் பார்லர் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. விபச்சாரம் நடைபெறுவதாக தகவல் கிடைத்த பார்லரில் சோதனை மேற்கொள்ள போலீசாருக்கு குருகிராம் போலீஸ் ஆணையர் கே.கே ராவ் அறிவுறுத்தினார்.

    இதைத்தொடர்ந்து, 29-வது செக்டாரில் உள்ள குறிப்பிட்ட மசாஜ் பார்லரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் விபச்சாரத்தில் ஈடுபட்ட தாய்லாந்து நாட்டை சேர்ந்த 5 பெண்கள், தென்கொரியாவை சேர்ந்த ஒரு பெண், மணிப்பூரை சேர்ந்த 5 பெண்கள், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 4 ஆண்கள் என 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும், இரவு விடுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 2 பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், கைதான வெளிநாட்டை சேர்ந்தவர்களில் யாரேனும் விசா முடிந்த பின்னரும் இந்தியாவில் தங்கியுள்ளனரா என்பதையும் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Next Story
    ×