என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமேதி பாராளுமன்ற தொகுதியில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த ராகுல்
Byமாலை மலர்5 July 2018 7:23 AM GMT (Updated: 5 July 2018 7:23 AM GMT)
தனது தொகுதியான அமேதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டு மக்களின் குறைகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டறிந்தார். #RahulGandhi
லக்னோ :
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தனது பாராளுமன்ற தொகுதியான அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
தனது தொகுதிக்குட்பட்ட அரசு விளைபொருள் கொள்முதல் கூடத்தில் இரு நாட்கள் காத்திருந்து உயிரிழந்த விவசாயி குடும்பத்தாரை ராகுல் காந்தி சந்தித்து நேற்று ஆறுதல் கூறினார். பின்னர், புர்ஸத்கஞ்ச் பகுதியில் காங்கிரஸ் தொண்டர்களிடையே பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக தாக்கி பேசினார்.
இந்நிலையில், பயணத்தின் இரண்டாம் நாளான இன்று தொகுதி மக்களின் குறை கேட்பு கூட்டதில் கலந்துகொண்டு மக்களின் குறைகளை ராகுல் கேட்டறிந்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதைத்தொடர்ந்து, தாலா எனும் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவசாயிகள் சந்திப்பில் பங்கேற்று விவசாயிகளுடன் அவர் கலந்துரையாட உள்ளார்.
இறுதியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் தேடுதல் வேட்டையின் போது கடந்த 20-ம் தேதி பலியான துணை ராணுவ வீரரான அனில் மயூரியாவின் வீட்டிற்கு சென்று ராகுல் காந்தி ஆறுதல் கூறுவார் என மாநில காங்கிரஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RahulGandhi
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தனது பாராளுமன்ற தொகுதியான அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
தனது தொகுதிக்குட்பட்ட அரசு விளைபொருள் கொள்முதல் கூடத்தில் இரு நாட்கள் காத்திருந்து உயிரிழந்த விவசாயி குடும்பத்தாரை ராகுல் காந்தி சந்தித்து நேற்று ஆறுதல் கூறினார். பின்னர், புர்ஸத்கஞ்ச் பகுதியில் காங்கிரஸ் தொண்டர்களிடையே பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக தாக்கி பேசினார்.
இந்நிலையில், பயணத்தின் இரண்டாம் நாளான இன்று தொகுதி மக்களின் குறை கேட்பு கூட்டதில் கலந்துகொண்டு மக்களின் குறைகளை ராகுல் கேட்டறிந்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதைத்தொடர்ந்து, தாலா எனும் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவசாயிகள் சந்திப்பில் பங்கேற்று விவசாயிகளுடன் அவர் கலந்துரையாட உள்ளார்.
இறுதியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் தேடுதல் வேட்டையின் போது கடந்த 20-ம் தேதி பலியான துணை ராணுவ வீரரான அனில் மயூரியாவின் வீட்டிற்கு சென்று ராகுல் காந்தி ஆறுதல் கூறுவார் என மாநில காங்கிரஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RahulGandhi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X