என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லோக்பால் அமைக்க எடுத்த நடவடிக்கை என்ன? - 10 நாட்களில் தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
Byமாலை மலர்2 July 2018 7:32 AM GMT (Updated: 2 July 2018 7:32 AM GMT)
லோக்பால் அமைக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து 10 நாட்களுக்குள் தெரிவிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. #LokpalAppointment #LokpalCase
புதுடெல்லி:
ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டும், இதுவரை லோக்பால் அமைக்கப்படவில்லை. இதையடுத்து லோக்பால் அமைப்பை உருவாக்கி அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க உத்தரவிடக்கோரி காமன் காஸ் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் எப்போது நியமிக்கப்படுவார்கள்? என்பது தொடர்பாக காலக்கெடுவுடன் கூடிய பதில் மனு தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், லோக்பால் உறுப்பினர்களை நியமனம் செய்வதற்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து 10 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். #LokpalAppointment #LokpalCase
ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டும், இதுவரை லோக்பால் அமைக்கப்படவில்லை. இதையடுத்து லோக்பால் அமைப்பை உருவாக்கி அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க உத்தரவிடக்கோரி காமன் காஸ் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் எப்போது நியமிக்கப்படுவார்கள்? என்பது தொடர்பாக காலக்கெடுவுடன் கூடிய பதில் மனு தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், லோக்பால் உறுப்பினர்களை நியமனம் செய்வதற்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து 10 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். #LokpalAppointment #LokpalCase
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X