search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்த ராணுவ வீரர்
    X

    கற்பழித்த பெண்ணையே திருமணம் செய்த ராணுவ வீரர்

    ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் கற்பழித்த பெண்ணையே ராணுவ வீரர் திருமணம் செய்து கொண்டார்.
    புவனேஸ்வரம்:

    இந்திய ராணுவம் பீகார் ரெஜிமன்ட் பிரிவில் ராணுவ வீரராக வேலை பார்த்து வருபவர் துலுபிரதான்.

    இவர், ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு இருந்தார்.

    அங்குள்ள பெனா காபாரி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வந்தார்.

    அந்த பெண் கடந்த 15-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது துலுபிரதானும், அவரது நண்பர்களும் அந்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து வலுக்கட்டாயமாக அவரை கற்பழித்தனர்.

    இது சம்பந்தமாக அவர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து துலுபிரதான் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே துலுபிரதான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும், அந்த வழக்கை வாபஸ் பெறும்படியும் கூறினார். இதை அந்த பெண் ஏற்றுக்கொண்டார்.

    இதையடுத்து அவர்களுக்கு உதயகிரியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. அதில், இரு வீட்டாரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். #Tamilnews

    Next Story
    ×