search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான நிலைய கழிப்பறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.3 கோடி மதிப்பிலான தங்கம்
    X

    விமான நிலைய கழிப்பறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.3 கோடி மதிப்பிலான தங்கம்

    டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் கேட்பாரற்று கிடந்த 3 கோடி ரூபாய் மதிப்பிலான 9 தங்க கட்டிகள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். #CISF #DelhiAirport
    புதுடெல்லி:

    டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், மர்மநபர் ஒருவர் லேப்டாப் பேக் உடன் கழிவறை சென்று அங்கிருக்கும் கடத்தல் தங்க கட்டிகளை பேக்கில் எடுத்துக்கொண்டு செல்ல இருப்பதாக போலீசாருக்கு நேற்றிரவு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது.

    இதனை அடுத்து, விமான நிலைய வளாகத்தில் உள்ள கழிவறையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் போது ஒரு பையில் தலா ஒரு கிலோ எடையுடைய 9 தங்க கட்டிகள் அங்கு கீழே வைக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து, போலீசார் தங்க கட்டிகளை கைப்பற்றி சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு 3 கோடி ரூபாய் இருக்கும் என தெரிவித்த அதிகாரிகள், சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தங்க கட்டிகளை கழிவறைக்கு எடுத்து வந்த நபரை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
    Next Story
    ×