என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திர சச்சார் காலமானார்
Byமாலை மலர்20 April 2018 10:02 AM GMT (Updated: 20 April 2018 10:02 AM GMT)
இந்தியாவில் முஸ்லிம்கள் கல்வி, சமூகம், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்திருந்த நீதிபதி ராஜேந்திர சச்சார் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். #JusticeRajinderSachar
புதுடெல்லி:
1924-ம் ஆண்டு லாகூர் நகரில் பிறந்த ராஜிந்தர் சச்சார் டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றி 1985-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் முஸ்லிம்களின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சச்சார் தலைமையில் 2005-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் குழு அமைத்திருந்தார்.
2006-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட சச்சார் குழு அறிக்கையில் இந்திய முஸ்லிம்கள் சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. முஸ்லிம்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த பரிந்துரைகள் எதுவும் தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், உடல்நிலை குறைவால் டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 94 வயதான சச்சார் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை நடக்க உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். #JusticeRajinderSachar #TamilNews
1924-ம் ஆண்டு லாகூர் நகரில் பிறந்த ராஜிந்தர் சச்சார் டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றி 1985-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் முஸ்லிம்களின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சச்சார் தலைமையில் 2005-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் குழு அமைத்திருந்தார்.
2006-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட சச்சார் குழு அறிக்கையில் இந்திய முஸ்லிம்கள் சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. முஸ்லிம்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த பரிந்துரைகள் எதுவும் தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், உடல்நிலை குறைவால் டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 94 வயதான சச்சார் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை நடக்க உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். #JusticeRajinderSachar #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X