என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காலமானார்"
- எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.
- அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல்.
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.அன்பழகன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
கடந்த 2001- 2006 வரையில் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். அன்பழகன். இவர் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஏ.கே.எஸ் அன்பழகன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- சுமார் 350 படங்களிலும் நடிகராகவும் மற்றும் 150 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்
- ‘பிதாமகன்’ படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.
தமிழ் சினிமாவின் பிரபலங்கள் அடுதடுத்து உயிரழந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். கடந்த வாரம் நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார். இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் டேனியல் பாலாஜி காலமானார். அச்சோகத்தில் இருந்து மீண்டுவரமால் இருந்த திரையுலகம் இப்போழுது அடுத்து மீண்டும் ஒரு உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளது.
பல படங்களில் துணை நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்து பிரபலமானவர் நடிகர் விஸ்வேஷ்வர ராவ். திடீர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 62.
விக்ரம் -சூர்யா நடிப்பில் வெளியான'பிதாமகன்' படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.உன்னை நினைத்து படத்திலும் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பார்.
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்ர நடிகராகவும் நடித்துள்ளார். சுமார் 350 படங்களிலும் நடிகராகவும் மற்றும் 150 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது உடல் நாளை தகனம் செய்யப்படவுள்ள நிலையில், சிறுசேரியில் உள்ள இவரது வீட்டில் பொதுமக்கள் மற்றும் திரையுலக நண்பர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
- ஏ 1 படத்தில் இவர் நடித்த அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட் ஆனது.
- நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தார்.
தமிழ் சின்னத்திரையில் "லொள்ளு சபா" என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் சேஷூ. இவர் தனது தனித்துவமான நகைச்சுவை பாணியைக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.
சந்தானம் நடிக்கும் பெரும்பாலான படங்களில் நடிகர் சேஷு நடித்துள்ளார்.
ஏ 1 படத்தில் இவர் நடித்த அனைத்து நகைச்சுவை காட்சிகளும் ஹிட் ஆனது. முக்கியமாக "அச்சச்சோ அவரா பயங்கரமான ஆள் ஆச்சே" என்று அவர் நடித்த காட்சிகள் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.
இதற்கு அடுத்து வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் அவர் நடித்த காட்சிகள் அனைவராலும் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தார். அவரின் சிகிச்சைக்காக பலர் நிதி திரட்டி கொடுத்தனர்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இச்செய்தி திரைப்பட கலைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- செட்டிக்குறிச்சி ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி காலமானார்.
- அவரின் இறுதிச்சடங்கு நாளை மதியம் 2 மணிக்கு மேல் அவரது இல்லத்தில் வைத்து நடைபெறும்.
மதுரை
மதுரை காவேரி மஹால் மறைந்த கே.வி.கே.ராஜேந் திரபிரபுவின் மைனத்துன ரும், அசோகா பேலஸ் உரி மையாளர் மறைந்த செட்டிக் குறிச்சி எஸ்.ஏ.ஜே.ராஜேந்திரனின் மனைவியும், எஸ். ஏ.ஜே.ஆர்.அசோக்குமா ரின் தாயாரும், மதுரை பி.டி.ஆர். அகாடமி மற்றும் பி.ஆர்.பி. ஏஜென்சி டாக்டர் ஆர்.பி.திருப்பதி ராஜின் பெரியம்மாவும், மதுரை சரஸ்வதி பவனம் லாட்ஜிங் வி.வி.பி.எம்.செல்வராஜின் சகோதரியும், மதுரை காமரா ஜர் பல்கலைக்கழக துணை பேராசிரியர் டாக்டர் எஸ்.பிரவின் குமாரின் அத்தையுமான ஆர்.ராஜேஸ்வரி நேற்று (23-ந்தேதி, திங்கட் கிழமை) மதியம் 12 மணியளவில் காலமானார்.
இதையடுத்து அவரது உடல் உறவினர்கள் அஞ்ச லிக்காக மதுரை காக்கா தோப்பில் சுப்புராயன் அக்ராயம் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக் கப்பட்டுள்ளது. இதில் மறைந்த ஆர்.ராேஜஸ்வரியி ன் உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட் சியினர், கல்வியாளர்கள் உள்ளிட்ேடார் கலந்து கொண்டு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த ஆர்.ராஜேஸ்வ ரியின் இறுதிச்சடங்கு இன்று (24-ந்தேதி, செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணிக்கு மேல் அவரது இல்லத்தில் வைத்து நடைபெறும் என்று குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
- நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளரின் தந்தை செல்லப்பெருமாள் காலமானார்
- நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
காரைக்குடி
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப் பாளர்-பொறியாளர் வெற்றிகுமரனின் தந்தை நா.செல்ல பெருமாள் காலமானார்.
அவரது இறுதிச் சடங்கு இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணி யளவில் மதுரை பைபாஸ் ரோடு, துரைசாமி நகரில் உள்ள இல்லத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மரணம் அடைந்த செல்லப்பெருமாளின் உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை நாடாளு மன்ற தொகுதி மண்டலச் செயலாளர் சாயல்ராம், ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொரு ளாளர் ஓரிக்கோட்டை காளீஸ்வரன், திருவாடானை சட்ட மன்ற தொகுதி செய லாளர் வெற்றி என்ற ஜெயச்சந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
இரும்புக்குதிரைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன். பிரபல மாத, வார பத்திரிக்கைகளையும், சிறுகதைகளையும் எழுதி மக்களிடையே நன்கு பரிட்சையமான அவர், கமல்ஹாசன் நடித்த நாயகன் உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.
தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன், சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலகுமாரனின் உயிர் இன்று பிற்பகல் பிரிந்தது. அவருக்கு வயது 71.
பாலகுமாரனின் மறைவுக்கு எழுத்துலகம் மற்றும் கலையுலகத்தை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #Balakumaran #RIPBalakumaran
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்