என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
    X

    கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்

    • வயது மூப்பின் காரணமாக சென்னை பெரம்பூரில் இன்று மாலை காலமானார்.
    • ஆயிரக்கணக்கான திரைப் பாடல்களை கவிஞர் பூவை செங்குட்டுவன் எழுதியுள்ளார்.

    கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன் (90) வயது மூப்பின் காரணமாக சென்னை பெரம்பூரில் இன்று மாலை காலமானார்.

    1,000-க்கும் மேற்பட்ட திரை பாடல்கள், 4,000 சுயாதீனப் பாடல்கள், 5,000 பக்திப்பாடல்களை செங்குட்டுவன் எழுதியுள்ளார்.

    குறிப்பாக செங்குட்டுவன் எழுதிய, நான் உங்கள் வீட்டுப்பிள்ளை, தாயிற்சிறந்த கோவிலுமில்லை, திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, இறைவன் படைத்த உலகை போன்ற பாடல்கள் என்றும் நினைவில் நீங்கா இடம்பெற்ற பாடல்கள் என கூறலாம்.

    Next Story
    ×