search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தியப்பிரதேச இடைத்தேர்தல் வெற்றி குறித்து டுவிட்டரில் ராகுல் கருத்து
    X

    மத்தியப்பிரதேச இடைத்தேர்தல் வெற்றி குறித்து டுவிட்டரில் ராகுல் கருத்து

    மத்தியப்பிரதேச இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் காற்று திசைமாறி நமது கதவை தட்டுவது தெரிகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியுள்ளார். #RahulGandhi #MPbypollvictory
    புதுடெல்லி :

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த மங்காவுலி மற்றும் கொலாரஸ் சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மத்தியப்பிரதேச இடைத்தேர்தல் வெற்றி குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த வெற்றியின் மூலம் காற்று திசைமாறி நமது கதவை தட்டுவது தெரிகிறது. முதலில் ராஜஸ்தானில் வெற்றி பெற்றோம். இப்போது, மத்தியப்பிரதேசத்தில் வெற்றி பெற்றுள்ளோம். இது மோசமான நிர்வாகத்துக்கு எதிராகவும், நம்பிக்கையின் அடிப்படையிலும் கிடைத்த வெற்றியாகும். எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கும், இதற்காக உழைத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

    ஓடிசா மாநிலத்தில் நடந்த ஒரு தொகுதி இடைத்தேர்தலில் பிஜூ ஜனதா தளம் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. #RahulGandhi #MPbypollvictory #tamilnews
    Next Story
    ×