என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![காஸ்கஞ்ச் கலவரத்தில் பலியானவரின் பெற்றோருக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு காஸ்கஞ்ச் கலவரத்தில் பலியானவரின் பெற்றோருக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு](https://img.maalaimalar.com/Articles/2018/Feb/201802021209593254_Security-increased-outside-residence-of-Kasganj-Clashes_SECVPF.gif)
X
காஸ்கஞ்ச் கலவரத்தில் பலியானவரின் பெற்றோருக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு
By
மாலை மலர்2 Feb 2018 6:40 AM GMT (Updated: 2 Feb 2018 6:39 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் காஸ்கஞ்ச் நகரில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானவர் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவரது வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. #kaskanjclash #chandangupta #security
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் காஸ்கஞ்ச் நகரில் குடியரசு தினத்தன்று விஷ்வ இந்து பரிஷத், ஏ.பி.வி.பி. உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து, ‘திரங்கா யாத்ரா’ என்ற பெயரில் இருசக்கர வாகனப் பேரணி நடத்தின. இந்த பேரணியின் மீது ஒருதரப்பினர், கற்களை வீசினர். பதிலுக்கு பேரணியில் சென்றவர்களும் கற்களை வீசித் தாக்க, சிலர் துப்பாக்கிகளை எடுத்துச் சரமாரியாக சுட்டனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் பேரணியில் வந்த சந்தன் குப்தா என்ற இளைஞர் கொல்லப்பட்டார். இதையடுத்து நகரின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. இதுதொடர்பாக, மாவட்ட போலீஸ் எஸ்.பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், இந்த வன்முறை சம்பவம் மாநிலத்துக்கு ஏற்பட்ட அவமானம் என்று உத்தரப்பிரதேச கவர்னர் ராம்நாயக் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கிடையே, பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்திய முக்கிய குற்றவாளி சலீம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், காஸ்கஞ்ச் கலவரத்தில் இறந்த சந்தன் குப்தா குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, போலீசார் கூறுகையில், சந்தன் குப்தாவின் பெற்றோருக்கு மர்ம நபர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் புகார் கொடுத்தனர். இதை தொடர்ந்தே அவர்களது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். #kaskanjclash #chandangupta #security #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)