என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சபரிமலை கோவிலில் நடை அடைப்பு இல்லை: திருவிதாங்கூர் தேவஸ்தானம் விளக்கம்
Byமாலை மலர்29 Nov 2017 5:30 AM GMT (Updated: 29 Nov 2017 5:30 AM GMT)
சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்தியையடுத்து சபரிமலை கோவில் நடை தினமும் வழக்கம்போல் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.
சபரிமலை:
கேரள மாநிலம் பந்தளம் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர் அம்பா தம்புராட்டி (வயது 94). இவர் கடந்த 25-ந் தேதி மரணம் அடைந்தார். அதன் காரணமாக பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவில் நடை வருகிற 6-ந் தேதி வரை அடைக்கப்படுவதாக ராஜகுடும்பத்தினர் தெரிவித்தனர். 6-ந் தேதி நடைபெறும் சுத்தி கலச சடங்குகளுக்கு பின்னர் கோவில் நடை திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அம்பா தம்புராட்டி மரணத்தை தொடர்ந்து சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 7 நாட்களுக்கு அடைக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின. அது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் விளக்கம் அளித்து இருக்கிறது.
இதுதொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடைக்கப்படுவதாக வெளியான தகவல் வெறும் வதந்தி ஆகும். சபரிமலை அய்யப்பன் கோவில் நடை தினமும் வழக்கம்போல் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந் தேதி மண்டல பூஜைக்கு பின், அன்றைய தினம் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். டிசம்பர் 30-ந் தேதி மீண்டும் நடை திறக்கப்படும். ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஜனவரி 20-ந் தேதி நடை அடைக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பந்தளம் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர் அம்பா தம்புராட்டி (வயது 94). இவர் கடந்த 25-ந் தேதி மரணம் அடைந்தார். அதன் காரணமாக பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவில் நடை வருகிற 6-ந் தேதி வரை அடைக்கப்படுவதாக ராஜகுடும்பத்தினர் தெரிவித்தனர். 6-ந் தேதி நடைபெறும் சுத்தி கலச சடங்குகளுக்கு பின்னர் கோவில் நடை திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அம்பா தம்புராட்டி மரணத்தை தொடர்ந்து சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 7 நாட்களுக்கு அடைக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின. அது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் விளக்கம் அளித்து இருக்கிறது.
இதுதொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடைக்கப்படுவதாக வெளியான தகவல் வெறும் வதந்தி ஆகும். சபரிமலை அய்யப்பன் கோவில் நடை தினமும் வழக்கம்போல் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந் தேதி மண்டல பூஜைக்கு பின், அன்றைய தினம் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். டிசம்பர் 30-ந் தேதி மீண்டும் நடை திறக்கப்படும். ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஜனவரி 20-ந் தேதி நடை அடைக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X