என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல்வரை நெருங்க வேண்டாம்: செய்தியாளர்களுக்கு தடை போட்ட அரியானா அரசு
Byமாலை மலர்15 Nov 2017 4:23 PM GMT (Updated: 15 Nov 2017 4:24 PM GMT)
அரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டாரை செய்தியாளர்கள் நெருங்கிச்சென்று செய்தி சேகரிக்க வேண்டாம் என்று அரசு அதிகாரிகள் தடை விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சண்டிகர்:
அரியானா மாநிலம் சோனிபட் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஊடகங்களுக்கு அறிக்கை அனுப்பினார். அதில், ‘ஊடகவியலாளர்கள் முதல்வரை நெருங்கிச் சென்று தனித்தனியாக பேட்டி எடுக்கக்கூடாது. ஒட்டு மொத்தமாக நின்று பேட்டி காண வேண்டும். முதல்வர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த பின்னர், தனித்தனியக பேட்டி எடுப்பதற்காக நிருபர்கள் ஓடக்கூடாது.
செய்தியாளர்கள் மைக்குகள் மற்றும் கேமராக்களுடன் முதல்வரை நெருங்கும் போது பாதுகாப்பு குறைபாடுகளை அதிகாரிகளால் கணிக்க முடியாமல் போகின்றது. முதல்-மந்திரிக்கும் சிரமமாக உள்ளது. எனவே, முதல்வரின் பாதுகாப்பு கருதி இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டிருந்தது.
இது செய்தியாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அந்த உத்தரவு உடனடியாக திரும்ப பெறப்பட்டது.
ரியான் கொலை வழக்கை குர்கான் போலீஸ் கையாண்ட விதம் தொடர்பான கேள்விகளை முதல்வர் கட்டார் தவிர்த்த நிலையில், இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.
அரியானா மாநிலம் சோனிபட் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஊடகங்களுக்கு அறிக்கை அனுப்பினார். அதில், ‘ஊடகவியலாளர்கள் முதல்வரை நெருங்கிச் சென்று தனித்தனியாக பேட்டி எடுக்கக்கூடாது. ஒட்டு மொத்தமாக நின்று பேட்டி காண வேண்டும். முதல்வர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த பின்னர், தனித்தனியக பேட்டி எடுப்பதற்காக நிருபர்கள் ஓடக்கூடாது.
செய்தியாளர்கள் மைக்குகள் மற்றும் கேமராக்களுடன் முதல்வரை நெருங்கும் போது பாதுகாப்பு குறைபாடுகளை அதிகாரிகளால் கணிக்க முடியாமல் போகின்றது. முதல்-மந்திரிக்கும் சிரமமாக உள்ளது. எனவே, முதல்வரின் பாதுகாப்பு கருதி இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டிருந்தது.
இது செய்தியாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அந்த உத்தரவு உடனடியாக திரும்ப பெறப்பட்டது.
ரியான் கொலை வழக்கை குர்கான் போலீஸ் கையாண்ட விதம் தொடர்பான கேள்விகளை முதல்வர் கட்டார் தவிர்த்த நிலையில், இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X