என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகார்: வாய்த்தகராறில் மருமகனை சுட்டுக்கொன்ற மாமனார் கைது
Byமாலை மலர்22 Oct 2017 11:28 AM GMT (Updated: 22 Oct 2017 11:28 AM GMT)
பீகார் மாநிலத்தின் ககாரியா மாவட்டத்தில் வாய்த்தகராறில் மருமகனை சுட்டுக்கொன்ற மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாட்னா:
பீகார் மாநிலத்தின் ககாரியா மாவட்டத்திற்குட்பட்ட கோக்ரி பகுதியில் வசித்து வருபவர் பெச்சான் ஷர்மா. இன்று அவரது வீட்டில் வைத்து அவருக்கும் அவரது மருமகன் கவுரவ் ஷர்மாவுக்கும் இடையே ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பெச்சான் ஷர்மாவின் மகன் தீரஜ் ஷர்மாவும் சம்பவ இடத்தில் இருந்துள்ளார்.
அவர்களுக்கிடையிலான வாய்த்தகராறு மோதலாக முற்றியுள்ளது. இதையடுத்து கோபமடைந்த பெச்சான் ஷர்மா துப்பாக்கியை எடுத்து அவரது மருமகனை நோக்கி சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த கவுரவ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெச்சான் ஷர்மாவை கைது செய்தனர்.
வாய்த்தகராறில் மாமனாரே மருமகனை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X