search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மூன்று பேர் கைது
    X

    ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மூன்று பேர் கைது

    இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.
    கான்பூர்:

    கிரிக்கெட் போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. இந்த ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் சூதாட்டம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பி.சி.சி.ஐ.-இன் ஊழல் தடுப்பு பிரிவினர் சந்தேகத்தின் அடிப்படையில் சிலரது நடவடிக்கையை கவனித்து வந்துள்ளனர். இதன் அடிப்படையிலேயே மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இதைத் தொடர்ந்து உத்திர பிரதேச குற்றப் பிரிவு போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர். கான்பூரின் கிரீன் பார்க் மைதானத்தில் கடந்த புதன் கிழமை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்ற நிலையில் மே 13-ந்தேதியும் போட்டி நடைபெற இருக்கிறது.   

    முன்னதாக உத்திர பிரதேச மாநிலத்தில் சிறப்பு அதிரடி படையினர் நடத்திய சோதனையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

    கிரிக்கெட் சூதாட்டம் குறித்து துப்பு கிடைத்ததை தொடர்ந்து சிறப்பு அதிரடி படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கான்பூர் பகுதியின் மூன்று இடங்களில் நடைபெற்ற சோதனையில் மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
    Next Story
    ×