search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    பிரமிடு ரகசியம்
    X

    பிரமிடு ரகசியம்

    • எகிப்தின் அரசனாக ஆனதும் ஸ்பிங்க்ஸை அவன் புதைமணலில் இருந்து மீட்டெடுத்தான்.
    • பிரமிடில் இருந்து ஒரு பாதை நேராக செல்லாமல் கோணலாக செல்வதை கண்டார்கள்.

    எகிப்தின் ஸ்பிங்க்ஸ் (Sphinx) எனும் சிங்க சிலை உலகின் மிக தொன்மையான சின்னங்களில் ஒன்று. இது கட்டபட்டு 4500 ஆண்டுகள் ஆனதாக மதிப்பிடபடுகிறது. இது எதற்காக கட்டபட்டது? சமய ரீதியிலா, எதாவது போர் வெற்றியின் சின்னமா என எதுவும் யாருக்கும் தெரியாது.

    இந்த 4500 ஆண்டுகளில் சில ஆயிரம் ஆண்டுகள் இது பாலைவன புயலில் முழுக்க மணலில் புதைந்தே இருந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி ஒரு ஸ்பிங்க்ஸ் இருப்பதே தெரியாமல் எகிப்தில் பல தலைமுறை மக்கள் வாழ்ந்து, மறைந்து இருக்கிறார்கள் என கேட்டால் வியப்பாக உள்ளது அல்லவா?

    3000 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்ஜியத்தை இழந்த இளவரசன் ஒரு மணல் மேட்டில் படுத்து தூங்குகையில், அங்கே ஸ்பிங்க்ஸ் மணலில் புதைபட்டு இருப்பதை காண்கிறான். "என் ராஜ்ஜியத்தை திரும்ப கொடுத்தால் உன்னை புணரமைப்பேன்" என்கிறான். அதேபோல் எகிப்தின் அரசனாக ஆனதும் ஸ்பிங்க்ஸை அவன் புதைமணலில் இருந்து மீட்டெடுத்தான் என்பது ஒரு தொன்மம்.

    எகிப்தின் கீஸா பிரமிடுக்கு நேர் எதிரே இது இருக்கிறது. இது இரண்டும் எப்போது கட்டபட்டது என ஒருமித்த கருத்து எதுவும் இல்லை. காரணம் இரண்டும் பாறைகளால் ஆனது. பாறைகளை கார்பன் டேட்டிங் செய்தால் அவை உருவான காலத்தை தான் காட்டும்

    அதன்பின் பிரமிடில் இருந்து ஒரு பாதை நேராக செல்லாமல் கோணலாக செல்வதை கண்டார்கள். இது இப்படி கோணலாக செல்ல காரணம், ஸ்பின்க்ஸ் அருகே செல்லதான் என்கிறார்கள். ஸ்பிங்க்ஸ் கட்டியபின் பிரமிடை கட்டியதால் இப்படி பாதை செல்கிறது என்றார்கள். ஆனால் இதுவும் ஒரு யூகம் தான்

    பண்டைய ரெகார்டுகளை வைத்து ஸ்பிங்கஸ் அமைக்கப்பட்ட ஆண்டு கிமு 2530 எனவும், கிரேட் பிரமிடு அமைக்கபட்ட ஆண்டு கிமு 2560 எனவும் கணக்கிடுகிறார்கள். காப்ரே மற்றும் குபு என தந்தை மகன் என இரு மன்னர்கள் கட்டி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

    பிரமிடுகள் இன்று வெறும் கல்வடிவமாக இருந்தாலும் அவை கட்டபட்ட போது அவற்றின் மேல் சுண்ணாம்புக்கல் வைத்து பூசியும், கூரையில் பொன்வேய்ந்தும் தக, தக என மின்னின. பாலைவன மணலில் பல மைல் தொலைவில் இருந்தும் கண்கூசும் வெண்மை நிறத்துடன் காட்சியளித்தன.

    - நியாண்டர் செல்வன்

    Next Story
    ×