என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பணகுடியில் மொபட்டை திருடிச்சென்ற வாலிபர்-சி.சி.டி.வி. மூலம் போலீசார் விசாரணை
Byமாலை மலர்19 July 2022 9:11 AM GMT
- சி.சி.டி.வி.யில் வாலிபர் ஒருவர் சாதாரணமாக வந்து மொபட்டை திருடி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.
- பணகுடி பகுதியில் இதேபோல் 5-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருட்டு போய் உள்ளது
பணகுடி:
பணகுடியை சேர்ந்தவர் ராஜன். இவர் பணகுடி மெயின் ரோட்டில் மாதா கோவில் அருகே ஸ்டூடியோ நடத்தி வருகிறார். நேற்று கடை முன்பு தனது மொபட்டை நிறுத்திவிட்டு அவர் கடைக்குள் சென்றார்.
திருட்டு
சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது அவரது மொபட்டை காணவில்லை. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். அதில் வாலிபர் ஒருவர் சாதாரணமாக வந்து மொபட்டை திருடி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.
அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பணகுடி பகுதியில் இதேபோல் 5-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருட்டு போய் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X