search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணகுடியில் மொபட்டை திருடிச்சென்ற வாலிபர்-சி.சி.டி.வி. மூலம் போலீசார் விசாரணை
    X

    மொபட்டை வாலிபர் ஒருவர் திருடிச்செல்லும் காட்சி.

    பணகுடியில் மொபட்டை திருடிச்சென்ற வாலிபர்-சி.சி.டி.வி. மூலம் போலீசார் விசாரணை

    • சி.சி.டி.வி.யில் வாலிபர் ஒருவர் சாதாரணமாக வந்து மொபட்டை திருடி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.
    • பணகுடி பகுதியில் இதேபோல் 5-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருட்டு போய் உள்ளது

    பணகுடி:

    பணகுடியை சேர்ந்தவர் ராஜன். இவர் பணகுடி மெயின் ரோட்டில் மாதா கோவில் அருகே ஸ்டூடியோ நடத்தி வருகிறார். நேற்று கடை முன்பு தனது மொபட்டை நிறுத்திவிட்டு அவர் கடைக்குள் சென்றார்.

    திருட்டு

    சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது அவரது மொபட்டை காணவில்லை. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். அதில் வாலிபர் ஒருவர் சாதாரணமாக வந்து மொபட்டை திருடி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.

    அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பணகுடி பகுதியில் இதேபோல் 5-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருட்டு போய் உள்ளது.

    Next Story
    ×