search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றாலத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    குற்றாலத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இசக்கிதுரை சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    குற்றாலம் அருகே உள்ள ஆயிரப்பேரி முப்புடாதி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் காமராஜர். இவரது மகன் இசக்கிதுரை(வயது 19). நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இசக்கிதுரை சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

    இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், கடந்த சில நாட்களாக இசக்கிதுரை தனது தந்தையிடம் ஸ்மார்ட் போன் வாங்கிதருமாறு கேட்டு வந்துள்ளார். ஆனால் அவரது தந்தை காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×