search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காயல்பட்டினத்தில் வாலிபர் தற்கொலை
    X

    காயல்பட்டினத்தில் வாலிபர் தற்கொலை

    • கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
    • சந்தனகுமார் தனது படுக்கை அறைக்குள் சென்றவர் வெகு நேரமாகியும் கதவை திறக்கவில்லை.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சூரிய முத்து. இவரதுமகன் சந்தனகுமார் (வயது 22).டைல்ஸ் ஒட்டும் தொழில்செய்து வந்தார். கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனை அவரது தந்தை சூரிய முத்து கண்டித்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மாலை சந்தனகுமார் தனது படுக்கை அறைக்குள் சென்றவர் வெகு நேரமாகியும் கதவை திறக்கவில்லை.இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சந்தனகுமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சந்தனகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சந்தன குமாரின் அண்ணனான ஜெய கண்ணன் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப் பதிவு செய்தார்.இன்ஸ்பெக்டர் செந்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×