என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆறுமுகநேரியில் தொழிலாளிக்கு கத்திக்குத்து-நண்பர் கைது
Byமாலை மலர்5 Oct 2022 8:50 AM GMT
- ஆறுமுகநேரி வடக்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் பொன்துரை. அதே பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ்
- நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி வடக்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் பொன்துரை (52). அதே பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (56). ஓட்டல் தொழிலாளிகளான இவர்கள் இருவரும் நண்பர்கள்.
நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பொன்ராஜ், தான் வைத்திருந்த கத்தியால் பொன்துரையை குத்தியுள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த பொன்துரை சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூடினர்.
அப்போது பொன்துரைக்கு கொலை மிரட்டல் விடுத்தபடி பொன்ராஜ் அங்கிருந்து சென்று விட்டார். இச்சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம், பொன்ராஜை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X