search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் வேலை இல்லாததால் பெண் கொடுக்க மறுப்பு-வாலிபர் தற்கொலை
    X

    கோவையில் வேலை இல்லாததால் பெண் கொடுக்க மறுப்பு-வாலிபர் தற்கொலை

    • கடந்த 7 வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படித்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • கார்த்திக் சரியான வேலையில் இல்லாததால் திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டனர்.

    கோவை

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள வாகராயம்பா ளையத்தை சேர்ந்தவர் மாரப்பன். இவரது மகன் கார்த்திக் (வயது 28). தனியார் நிறுவன ஊழியர்.

    இவருக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படித்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். தற்போது அந்த இளம்பெண் மின்சார வாரியத்தில் அதிகாரியாக உள்ளார். ஆனால் கார்த்திக் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் இருந்தார்.

    இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கார்த்திக் சரியான வேலையில் இல்லாததால் திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டனர். இதனால் அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த கார்த்திக் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் தற்கொைல செய்து கொண்ட கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×