என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கொடைக்கானலில் பங்களாவை சூறையாடிய காட்டு யானைகள்
- கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமப் பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது.
- காட்டு யானைகள் நுழையாதபடி நிரந்தர தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமப் பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. விவசாய நிலங்களையும் விவசாயிகளின் உடைமைகளையும் வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது. பணப் பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை விவசாய நிலங்களில் புகாமல் விரட்ட வனத்துறையினர் இதுவரை முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழும் சூழலில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.இன்று விவசாய நிலங்களை சேதப்படுத்துமோ,தங்கள் வீடுகளை சேதப்படுத்துமோ,அல்லது தங்கள் உயிருக்கு உலை வைக்குமோ என்ற அச்சத்தில் ஒவ்வொரு நாட்களையும்அச்சத்துடன் கடந்து வருகின்றனர் பேத்துப்பாறை கிராம மக்கள்.
இதே போல் நேற்று புதுக்கோட்டை மன்னர் வாரிசுகளின் பழைய பங்களாவை சேதப்படுத்தியது.முழுமையாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள இப்பகுதி மக்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும். பொது மக்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில் காட்டு யானைகள் நுழையாதபடி நிரந்தர தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்