என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போலி பத்திர விவகாரம் தொடர்பாக கடையம் அருகே கிராம மக்கள் 3-வது நாளாக போராட்டம்-ரேசன் கார்டுகளை ஒப்படைக்க முடிவு
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்திய நிலையில் தற்போது அந்த நிலத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் வேலி அமைத்தனர்.
- இன்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், அதன்பின்னர் தென்காசி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் ஆகாசிடம் மனு அளித்தனர்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஏ.பி.நாடானூரில் அந்த பகுதியை சேர்ந்த 9 பேருக்கு கடந்த 1984-ம் ஆண்டு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படடது.
உள்ளிருப்பு போராட்டம்
அதில் 2 பேரின் நிலங்கள் தவிர மற்ற இடங்களை வருவாய் துறையினர் உதவியுடன் சிலர் போலி பத்திரம் போட்டு கிரையம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்திய நிலையில் தற்போது அந்த நிலத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் வேலி அமைத்தனர்.
இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள கோவில் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவிலும் கோவிலில் உள்ளிருப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு வந்தனர்.
கலெக்டரிடம் மனு
தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் அவர்கள் கோவிலில் சமையல் செய்தும், பெண்கள் பீடி சுற்றியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இன்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், அதன்பின்னர் தென்காசி கலெக்டர் அலு வலகத்திற்கு சென்றனர்.
அங்கு கலெக்டர் ஆகாசிடம் மனு அளித்தனர். தொடர்ந்து ரேசன் கார்டு, ஆதார் கார்டுகளை ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்