என் மலர்
வேலூர்
- மத்திய அரசு மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறுவது சரியல்ல.
- திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருக்கிறது.
வேலூர் மாவட்டம், கோட்டை மைதானத்தில் அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மண்டல மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார்.
அப்போது அவர் பேசியதாவது:-
2026 சட்டமன்ற தேர்தலில் 200 அல்ல 234 தொகுதிகளிலும் அதிமுக வாகைசூடும். தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழி கொள்கை தான், அதில் எந்த மாற்றமும் கிடையாது.
மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என் சாக்கு போக்கு சொல்லி மக்களை ஏமாற்றாதீர்கள். மத்திய அரசு மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறுவது சரியல்ல.
திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 15 சதவீதம் மின் கட்டணம் உயர்ந்திருக்கிறது.
குழந்தைகள் அப்பா என்று கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். பாலியல் துன்புறுத்தலின்போது குழந்தைகள், பெண்கள் அப்பா அப்பா என்று கதறுவது கேட்கவில்லையா ?
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. தமிழ்நாட்டில் 5 லட்சம் அரசு ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. எப்போது நிரப்ப போகிறது திமுக.
திமுக ஆட்சியில் தமிழ்நாடு போராட்டம் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை கோட்டைக்கு செல்வதற்கு வேலூர் கோட்டையில் இணைந்திருக்கிறோம்.
- இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.
வேலூர் மாவட்டம், கோட்டை மைதானத்தில் அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மண்டல மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்திலேயே இளைஞர்கள் அதிகமுள்ள இயக்கம் அதிமுகதான். கோட்டையில் இருப்பவர்களை வீட்டிற்கு அனுப்பும் கூட்டம் இது.
சென்னை கோட்டைக்கு செல்வதற்கு வேலூர் கோட்டையில் இணைந்திருக்கிறோம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும். 100 இளைஞர்களை தாருங்கள் உலகத்தையே மாற்றி காட்டுகிறேன் என விவேகானந்தர் கூறினார்.
எம்ஜிஆர் காலத்திலும், புரட்சித்தலைவி காலத்திலும் சரி அதிமுக யாரையும் நம்பி இருந்ததில்லை. அதிமுக இயக்கம் மக்களையும், தொண்டர்களையும் மட்டுமே நம்பி இருக்கிறது.
பெண்கள் தன்னை அப்பா என்று அழைப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறிக் கொள்கிறார். எதிர்க்கட்சியாக இருந்தபோது Go back என்ற ஸ்டாலின், தற்போது வெல்கம் மோடி என்கிறார்.
அதிமுகவுக்கு கூட்டணி வேறு, கொள்கை வேறு; கொள்கையே இல்லாத கட்சி திமுக. அதிமுகவைப் பற்றி பேச முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தகுதியில்லை.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது திமுக.
இவ்வாறு அவர் பேசினார்.
- வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு வரவேற்று பேசுகிறார்.
- மாநாட்டையொட்டி வேலூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
வேலூர்:
அ.தி.மு.க இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை வேலூர் மண்டலம் சார்பில் லட்சிய மாநாடு வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து ரெயில் மூலம் காட்பாடிக்கு வருகிறார்.
அங்கு அவருக்கு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்பு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை லட்சிய மாநாட்டிற்கு வருகை தருகிறார்.
மாநாட்டிற்கு இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் தலைமை தாங்குகிறார். பாசறை நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர். வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு வரவேற்று பேசுகிறார். கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார்.
மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.
மாநாட்டையொட்டி வேலூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. கட்சி கொடிகள் கட்டப்பட்டு வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரம்மாண்ட மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு, மாநாட்டு வளாகத்திற்குள் தலைவர்களின் மின்விளக்கு கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
- வேலூர் கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தை முன்னிட்டு காதல் ஜோடிகள் அதிகளவில் வருவார்கள்.
- கோட்டைக்கு வரும் காதல் ஜோடிகள் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள்.
வேலூர்:
உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜா மலர்களை பரிமாறிக் கொண்டும், பரிசு பொருட்களை பரிமாறிக் கொண்டும் காதலர் தினத்தை கொண்டாடுகின்றனர்.
வேலூர் கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தை முன்னிட்டு காதல் ஜோடிகள் அதிகளவில் வருவார்கள்.
தனிமையில் இருந்து காதல் ஜோடிகள் அத்துமீறவும், மேலும் சமூக விரோத கும்பல் காதல் ஜோடிகளிடம் தவறாக நடந்து கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.
இதனையடுத்து வேலூர் கோட்டைக்குள் நாளை காதல் ஜோடிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
வேலூர் கோட்டை வளாகம், கொத்தளம், பூங்கா பகுதிகளில் காதல் ஜோடிகளுக்கு நாளை அனுமதி இல்லை.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-
வேலூர் கோட்டையில் நாளை காதலர் தினத்தையொட்டி காதல் ஜோடிகள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. கோட்டைக்கு வரும் காதல் ஜோடிகள் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள்.
கோட்டை கோவில் மற்றும் அருங்காட்சியகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் செல்லலாம் அவர்களுக்கு எந்தவித இடையூறும் இருக்காது.
இது தவிர வேலூரில் மற்ற இடங்களில் தனிமையில் அமர்ந்து பேசும் காதல் ஜோடிகளிடம் யாராவது தகராறு செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றி மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.
- எல்லா ஊரிலும் தாமரை மலரலாம், தமிழகத்தில் தாமரையை மலர வைக்க மோடியாலும் முடியாது.
வேலூர்:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டில் மோடி அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று பேசினார்.
ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க. பெற்ற வெற்றி மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. எங்கள் ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள் என்று பொருள். டெல்லியில் பா.ஜ.க. வெற்றி பெற்றது குறித்து கேட்டதற்கு, வெதர் ஊருக்கு ஒவ்வொரு மாதிரியாக மாறும் ஆகையால் அரசியல் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப அங்கு அரசு நடக்கிறது.
எல்லா ஊரிலும் தாமரை மலரலாம், தமிழகத்தில் தாமரையை மலர வைக்க மோடியாலும் முடியாது, அந்தக் கூட்டத்தாலும் முடியாது.
ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்ததற்கு அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் ஒரு பொழுதுபோக்கு மன்றம். தமிழகத்திற்கு மத்திய அரசு தொடர்ச்சியாக நிதி வழங்காமல் வஞ்சிக்கப்படுவதற்கு, இதே மாதிரி சும்மா இருந்து விடவும் முடியாது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் தோற்றது. தற்போது டெல்லியிலும் தோற்றுள்ளது. அதற்கு என செயற்குழு பொதுக்குழு கூட்டி நாங்கள் முடிவு செய்வோம் என்றார்.
- தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை காட்டிலும் அந்த பெண்ணுக்கு கூடுதல் உயர் சிகிச்சை தேவைப்பட்டுள்ளது.
- ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நடந்த இந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:
திருப்பூரில் இருந்து சித்தூருக்கு கடந்த 6-ந் தேதி ரெயிலில் பயணித்த 36 வயதுடைய 4 மாத கர்ப்பிணி பெண் பயணம் செய்தார்.
அப்போது ஹேமராஜ் என்ற கொடூரனால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து தள்ளி விடப்பட்டார்.
இதில் கர்ப்பிணி கை, கால் முறிவு ஏற்பட்டது. பலத்த படுகாயத்துடன் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்து 4 மாத சிசு நேற்று உயிரிழந்தது.
இதனை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவருக்கு உயர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால் ராணிப்பேட்டையில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு வயிற்றில் உயிரிழந்த சிசுவை அகற்றுவதற்கான தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-
தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை காட்டிலும் அந்த பெண்ணுக்கு கூடுதல் உயர் சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஒவ்வொரு பிரச்சனையாக தொடர்ந்து உடலில் ஏற்படுவதால் சிறப்பு மருத்துவ வல்லுனர் குழுவினர் அப்பெண்ணை பரிசோதித்தனர்.
அவர்களின் ஆலோசனைக்கு பிறகு அவருக்கு உயர் சிகிச்சை தேவைப்படுகிறது என்பதாலும், பெண்ணின் நலன் கருதியும் தற்போது அரசு மருத்துவமனையில் இருந்து, ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவியையும் அரசு செய்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நடந்த இந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரெயில் பயணம் பாதுகாப்பானது தானா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த அச்சத்தை போக்கும் வகையில் ரெயில்வே போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
- தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த கர்ப்பிணி பெண்ணை மீட்ட ரெயில்வே போலீசார்.
- 4 மாத கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக நேற்று தெற்கு ரெயில்வே தெரிவித்தது.
கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரெயிலில் கர்ப்பிணி பெண் பயணம் செய்தார்.
வேலூர் கே.வி. குப்பம் அருகே ரெயில் சென்று கொண்டிருந்தபோது கர்ப்பிணி பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த சிலர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து கத்திக் கூச்சலிட்டுள்ளார்.
கர்ப்பிணி பெண் குரல் கேட்டு சக பயணிகள் வருவதற்குள் அந்த நபர்கள் அவரை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த கர்ப்பிணி பெண்ணை மீட்ட ரெயில்வே போலீசார் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும், கோவை- திருப்பதி விரைவு ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட 4 மாத கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்தது.
இந்நிலையில், ஓடும் ரெயிலில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இறந்த சிசுவை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவம் தகவல் வெளியாகியுள்ளது.
- வேலூர் கே.வி. குப்பம் அருகே ரெயில் சென்று கொண்டிருந்தபோது கர்ப்பிணி பெண் கழிவறைக்கு சென்றுள்ளார்.
- கர்ப்பிணி பெண்ணுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரெயிலில் கர்ப்பிணி பெண் பயணம் செய்தார்.
வேலூர் கே.வி. குப்பம் அருகே ரெயில் சென்று கொண்டிருந்தபோது கர்ப்பிணி பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த சிலர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து கத்திக் கூச்சலிட்டுள்ளார்.
கர்ப்பிணி பெண் குரல் கேட்டு சக பயணிகள் வருவதற்குள் அந்த நபர்கள் அவரை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த கர்ப்பிணி பெண்ணை மீட்ட ரெயில்வே போலீசார் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கர்ப்பிணி பெண்ணுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ரெயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட நபருக்கு புதிதாக பொறுப்பு வழங்கியதால் நிர்வாகிகள் அதிருப்தி என தகவல் வெளியாகியுள்ளது.
- மாநில தலைமையின் முடிவில் உடன்பாடு இல்லாததால், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட பாஜக தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட நபருக்கு புதிதாக பொறுப்பு வழங்கியதால் நிர்வாகிகள் அதிருப்தி என தகவல் வெளியாகியுள்ளது.
மாநில தலைமையின் முடிவில் உடன்பாடு இல்லாததால், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- யாருக்கும் எந்தவித காயம் இல்லாமல் விழாவை நடத்த வேண்டும்.
- மாடு விடும் விழாவை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
கே.வி.குப்பம்:
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த கீழ்முட்டுகூர் கிராமத்தில் காணும் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா (மாடு விடும் விழா) இன்று நடந்தது.
இதனையொட்டி விழா நடக்கும் வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது. சாலை நடுவே மண் கொட்டப்பட்டது.
விழா நடக்கும் வீதியில் ஒலிபெருக்கி, வாழை மரங்கள், மாவிலை தோரணம் மற்றும் வண்ண காகிதங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. காலை 7 மணி அளவில் காளைகளுக்கு முதலில் வீதி காண்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது. வீதியில் அவிழ்த்து விடுவதற்காக காளைகள் வாடிவாசல் அருகே கொண்டு வரப்பட்டது.
அந்த நேரத்தில் காளைகள் மீது கை போடுவதற்காக ஓடு பாதையில் ஏராளமானோர் வரிசையாக திரண்டு நின்றனர். மாடுகள் ஓடினாலும் அவர்களை முட்டி தூக்கி வீசிவிட்டு தான் செல்லும் நிலையில் அவர்கள் ஆரவாரத்துடன் காத்திருந்தனர். இதனை கண்ட போலீசார் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டால் ஓடுபாதையில் இருப்பவர்களுக்கு படுகாயம் ஏற்படும். அவர்களை வெளியேற சொல்லுங்கள் என விழா குழுவினரிடம் தெரிவித்தனர்.
அப்போதும் ஓடு பாதையில் இருந்தவர்கள் வெளியேறவில்லை .இதனால் மாடு விடும் விழாவை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் விழா குழுவினர் மற்றும் போலீசார் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவம் பற்றிய தகவல் அறிந்த கலெக்டர் சுப்புலெட்சுமி, போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் விழா குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். யாருக்கும் எந்தவித காயம் இல்லாமல் விழாவை நடத்த வேண்டும். அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் விழா குழுவினர் தான் பொறுப்பு என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஓடு பாதையில் நின்றவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து சுமார் 40 நிமிடம் தாமதமாக மாடு விடும் விழா தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
- இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள் என ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.
- வேலூர் மாங்காய் மண்டி அருகே "அரசு பொருட்காட்சி" திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து ஆளுநர் மாளிகை நேற்று எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது.
அதில், "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் "அபத்தமானது" மற்றும் "சிறுபிள்ளைத்தனமானது" என்று வற்புறுத்துகிறார்."
"பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர் கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி."
"இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள்," என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வேலூர் மாங்காய் மண்டி அருகே "அரசு பொருட்காட்சி" திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதனை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பொருட்காட்சியை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
தமிழக சட்டப்பேரவையில் மரபு மீறவில்லை. காலம், காலமாக கூட்டம் தொடங்கும்போது தமிழ்தாய் வாழ்த்து பாடுவதும், முடியும் போது தேசிய கீதம் பாடுவதும்தான் வழக்கம். இதை ஆளுநர் மாற்றச் சொன்னார். தற்போது தமிழக முதல்வருக்கு ஆணவம் என அவர் கூறியுள்ளார். அவருக்கு தான் திமிர் அதிகம்..
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆவணங்களின் நகலை அமலாக்கத்துறையினர் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல்.
- தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு அமலாக்கத்துறை சம்மன்.
தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு சொந்தமான கல்லூரியில் இரண்டாவது முறையாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவுபெற்றது. சோதனையைத் தொடர்ந்து பென் டிரைவ், ஹார்டு டிஸ்க், ஆவணங்களின் நகல் உள்ளிட்டவைகளை அமலாக்கத்துறையினர் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், வருகிற 22 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்கியுள்ளது. எம்.பி. கதிர் ஆனந்த்-க்கு சொந்தமான கல்லூரியில் இரண்டாவது முறையாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை சுமார் 17 மணி நேரம் நடைபெற்றது.
வேலூரை அடுத்த காட்பாடியில் உள்ள கல்லூரியில் சோதனை நடைபெற்ற நிலையில், நள்ளிரவு 2.10 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை முடிந்து புறப்பட்டு சென்றனர்.






