என் மலர்
வேலூர்
- இசுரேலின், நெகேவ் டிம்னா பூங்காவில் உள்ள காணப்படும் காளான் பாறைகள் இந்தியாவில் தார் பாலை வனப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.
- அதிசய காளான் பாறைகள் வேலூர் மாவட்டம் சிவநாதபுரம் அருகில் உள்ள குருமலையில் கண்டறியப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் சிவநாதபுரத்தில் அதிசய காளான் பாறை கண்டறியப்பட்டுள்ளது.
இசுரேலின், நெகேவ் டிம்னா பூங்காவில் உள்ள காணப்படும் காளான் பாறைகள் இந்தியாவில் தார் பாலை வனப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லை திருப்பத்தூர் மாவட்டம், கந்திலியை அடுத்த தோக்கியம் கிராமத்தில், கதிரியப்பன் கோவில் வட்டம் என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அதிசய காளான் பாறைகள் தற்போது வேலூர் மாவட்டம் சிவநாதபுரம் அருகில் உள்ள குருமலையில் கண்டறியப்பட்டுள்ளது.
- பூர்ணிமா கடந்த வாரம் பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருந்தார்.
- தீக்காயம் அடைந்த பூர்ணிமாவை தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
காரிமங்கலம்:
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் இவரது மகன் சசி மோகன் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி பகுதியில் வசித்து வருகிறார்கள். இவரது மனைவி பூர்ணிமா (வயது 30) கடந்த வாரம் பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக திடீரென பூர்ணிமா மயங்கி விழுந்தார்.
இதில் அவர் அணிந்திருந்த ஆடை விளக்கில் பட்டு தீ பற்றிக்கொண்டது. இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டனர். பின்னர் தீக்காயம் அடைந்த அவரை தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பூர்ணிமா உயிரிழந்தார்.
- சேமித்து வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் கிலோ உப்பு வெள்ளத்தால் நாசமானது.
- தூத்துக்குடியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உப்பு அளவு வெகுவாக குறைந்துவிட்டது.
வேலூர்:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியா மட்டுமின்றி இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தூத்துக்குடி, ஆறுமுகநேரி, முத்தையாபுரம், முள்ளக்காடு, வெள்ளப்பட்டி, தருவைகுளம், வேம்பார், பழையகாயல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த மாதம் பெய்த புயல் மழையால் தாமிரபரணியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், ஆறுமுகநேரி மற்றும் உப்பளங்களில் வெள்ளம் புகுந்தது.
அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் கிலோ உப்பு வெள்ளத்தால் நாசமானது.
இதனால் தூத்துக்குடியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உப்பு அளவு வெகுவாக குறைந்துவிட்டது. வரத்து குறைவாக உள்ளதால் தூத்துக்குடியில் இருந்து விற்பனைக்கு வரும் உப்பு விலை உயர்ந்துள்ளது.
50 சிறிய பாக்கெட்டுகள் கொண்ட ஒரு மூட்டை கடந்த மாதம் வரை ரூ.230-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ. 290 வரை விலை உயர்ந்துள்ளது.
சில்லரை விலையில் கல் உப்பு ஒரு பாக்கெட் ரூ.7 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த கல் உப்பு ஒரு பாக்கெட் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தூத்துக்குடியில் இருந்து தமிழகம் முழுவதும் உப்பு விற்பனைக்கு வருகிறது. மழை வெள்ளத்தால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு தயார் செய்யப்பட்டிருந்த உப்பு வெள்ளத்தால் நாசமாகிவிட்டது. இதன் காரணமாக உப்பு விலை உயர்ந்துள்ளது.
ஓட்டல்கள் மற்றும் தோசை, இட்லி மாவு தயாரிப்பவர்கள் உணவு தின்பண்டங்கள் தயாரிப்பவர்கள் மொத்தமாக கல் உப்பு வாங்கி செல்கிறார்கள்.
மூட்டை மூட்டையாக உப்பு வாங்கிச் செல்லும் அவர்களுக்கு இந்த விலை உயர்வு கடினமாக அமைந்துள்ளது. இதன்மூலம் தின்பண்டங்கள் விலை உயரவும் வாய்ப்புள்ளது.
தூத்துக்குடி பகுதியில் தற்போது உப்பளங்கள் செயல்பட தொடங்கி உள்ளன. ஆனால் மாவட்டத்தில் மற்ற இடங்களில் வெள்ள பாதிப்பால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு உப்பு விலை குறைய வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர்.
- பல்வேறு இடங்களில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
- சமூக வலைதளங்களில் எம்.ஜி.ஆர். படத்திற்கு பதிலாக நடிகர் அரவிந்தசாமி படம் இருப்பதை கண்டு நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அ.தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பில் பல்வேறு இடங்களில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் மாதனூர் அடுத்த கீழ்மிட்டாளம் அ.தி.மு.க. கிளை சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எம்ஜிஆர் படத்திற்கு பதிலாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தில் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அரவிந்த்சாமியின் படத்தை வைத்திருந்தனர்.
இந்த படம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாட அ.தி.மு.க.வினர் வந்தனர். சமூக வலைதளங்களில் எம்.ஜி.ஆர். படத்திற்கு பதிலாக நடிகர் அரவிந்தசாமி படம் இருப்பதைக்கண்டு நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சுதாரித்துக்கொண்ட அ.தி.மு.க.வினர் நடிகர் அரவிந்த்சாமி படத்தின் மீது எம்.ஜி.ஆர். படத்தை ஒட்டினர். தொடர்ந்து எம்.ஜி.ஆர். பிறந்தநாளை கொண்டாடினர்.
- அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடட்டும். நாங்கள் என்ன, அவர் கையையா பிடித்துள்ளோம்.
- தோழமைக் கட்சிகள் எங்களுடன் இருப்பார்கள் என பலமாக நம்புகிறோம்.
வேலுார்:
பொங்கல் விழாவையொட்டி, தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் தி.மு.க. தொண்டர்களை சந்தித்தார்.
தேவகவுடா பிரதமர் ஆவதற்கு முன்பும், பிரதமராக இருந்தபோதும் மட்டுமின்றி, இப்போதும் கூட தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட காவிரியிலிருந்து தரக்கூடாது என்பதில் வைராக்கியமாக உள்ளார்.
அவரிடமிருந்து தமிழகத்துக்கு சாதகமான வார்த்தைகள் வராது. இவர் தீர்ப்பாயம் அமைப்பதை எதிர்த்தார்.
அரசிதழில் வெளியிடுவதை எதிர்த்தார். அவர் காலம் முழுவதும் தமிழகத்துக்கு எதிராகத்தான் பேசுவார்.
மோடிக்கு சாதகமாக பேசினால்தான் அவருடைய பிள்ளைகளால் அரசியல் நடத்த முடியும் என்று நினைக்கிறார். அதை பற்றி எல்லாம் நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
தேவகவுடா ஆதாயத்துக்காக பேசுகிறாரோ அல்லது வெறுப்பாக பேசுகிறாரோ, எப்படி இருந்தாலும் தமிழகத்துக்கு எதிர்ப்பாகத்தான் பேசுவார்.

அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடட்டும். நாங்கள் என்ன, அவர் கையையா பிடித்துள்ளோம். நாளைக்கே தேர்தல் வந்தாலும் தி.மு.க. சந்திக்கும்.
இது கொள்கைக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணியை அறிவிப்போம். இப்போதைக்கு கூட்டணி பற்றி சொல்ல முடியாது. இப்போதுள்ள தோழமைக் கட்சிகள் எங்களுடன் இருப்பார்கள் என பலமாக நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, "தமிழகத்தில் அதிகார மையங்கள் அதிகமாகிவிட்டது என பழனிசாமி கூறியுள்ளாரே" என கேட்டதற்கு, "அவர் எதிர்க்கட்சி, அப்படித்தான் கூறுவார்.
என துரைமுருகன் பதிலளித்தார்.
- பீஞ்சமந்தை மலை கிராமத்தில் இருந்து முத்துகுமரன் மலை வழியாக ஆந்திரா மாநில பதிவு எண் கொண்ட மினிவேன் ஒன்று வேகமாக வந்தது.
- பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகளை வேனுடன் ஒடுகத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
ஒடுகத்தூர்:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் காடுகளும், மலைகளும் அமைந்துள்ளது.
இங்கு சந்தன மரங்கள், செம்மரங்கள், தேக்கு மற்றும் அரியவகை மூலிகை செடிகளும், தாவரங்களும் உள்ளன. வனத்துறை சார்பில் ஆங்காங்கே சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
காப்பு காட்டில் பராமரிக்கப்படும் சந்தன மரங்களை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் வெட்டி கடத்தி செல்லும் சம்பவம் தொடர் கதையாகிவிட்டது.
வேலூர் மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 3 மணியளவில் ஒடுகத்தூர் அருகே உள்ள மலை கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பீஞ்சமந்தை மலை கிராமத்தில் இருந்து முத்துகுமரன் மலை வழியாக ஆந்திரா மாநில பதிவு எண் கொண்ட மினிவேன் ஒன்று வேகமாக வந்தது.
சந்தேகமடைந்த போலீசார் மினிவேனை மடக்கி பிடிக்க முயன்றனர்.போலீசாரை பார்த்தும் வேனை ஓட்டி வந்த டிரைவர் நிற்காமல் வேகமாக சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மினி வேனை துரத்தி சென்றனர்.
சுதாரித்துக்கொண்ட வேன் டிரைவர் உள்ளிட்ட 2 பேர் வேனை நிறுத்திவிட்டு வனப்பகுதியில் புகுந்து தப்பி சென்றனர். பின்னர், நிறுத்தப்பட்டிருந்த மினிவேனை பறிமுதல் செய்து சோதனை செய்தனர்.
அதில் காலி தண்ணீர் பாட்டில்களுக்கு அடியில், 2 முதல் 4 அடி நீளம் கொண்ட 1½ டன் எடையுள்ள சந்தன மரங்கள் கடத்தியது தெரிய வந்தது. மொத்தம் ரூ.2 கோடி மதிப்பிலான சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகளை வேனுடன் ஒடுகத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மினி வேனில் சந்தன மரங்கள் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை முழுமையாக அறிந்தபின் கருத்து தெரிவிப்போம்.
- நீதிமன்ற உத்தரவின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலூர்:
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* பொங்கல் நேரத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் உத்தரவு
* தொழிற்சங்கங்கள் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் முழுமையாக தெரியவில்லை.
* நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை முழுமையாக அறிந்தபின் கருத்து தெரிவிப்போம்.
* நீதிமன்ற உத்தரவின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* வரும் 19-ந்தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதன்பிறகு நல்ல முடிவு எடுக்கப்படும்.
* நிதி நிலையை பொறுத்து கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரங்கநாதன், அன்பரசன் ஆகியோர் மீது கொள்ளையர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து தூவினர்.
- கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த வழிப்பறியால் நிலை குலைந்த ரங்கநாதன் அலறி கூச்சலிட்டார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள அக்ராவரம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன்.
இவர், குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் இருந்து தங்க நகைகளை கொள்முதல் செய்து, வெவ்வேறு நகைக்கடைகளுக்கு கொண்டுசென்று கொடுப்பதோடு, அதற்கான தொகையை வசூல் செய்யும் ஏஜெண்ட்டாக வேலை செய்கிறார்.
இந்நிலையில் ரங்கநாதன், அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான அன்பரசன் என்பவரை துணைக்கு அழைத்துக்கொண்டு, நேற்று வழக்கம் போல் தன்னுடைய பணியில் ஈடுபட்டார்.
பின்னர் பரதராமி பகுதியில் வேலைகளை முடித்துக் கொண்டு, 2 பேரும் குடியாத்தம் நோக்கி ஒரே பைக்கில் நேற்று இரவு புறப்பட்டனர்.
அப்போது குட்லவாரிபள்ளி அருகே வந்தபோது, இவர்களை பின் தொடர்ந்து 2 பைக்குகளில் வந்த 4 பேர் மர்மகும்பல் வந்தனர். திடீரென ரங்கநாதனை வழிமறித்தனர்.
மேலும் ரங்கநாதன், அன்பரசன் ஆகியோர் மீது கொள்ளையர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து தூவினர்.
இதனால் 2 பேரும் நிலை தடுமாறினர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், ரங்கநாதனிடம் இருந்த 50 பவுன் நகைகள் மற்றும் ரூ.9 லட்சம் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த வழிப்பறியால் நிலை குலைந்த ரங்கநாதன் அலறி கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் ஓடி வந்து கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.
இது குறித்து ரங்கநாதன் பரதராமி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் குடியாத்தம், எர்தாங்கல் பரதராமி, பேர்ணாம்பட்டு சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டுத்தீப்போல் பரவியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரங்கநாதனை பல நாட்களாக பின்தொடர்ந்த மர்மநபர்கள்தான், இந்த செயலில் ஈடுபட்டிருக்க கூடும் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனவே, சம்பவம் நடந்த இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறோம். கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- கிராம மக்கள் பாம்பை பிடிக்க முயன்றனர்.
- வன துறையினர் கயிற்றால் கட்டி வைத்திருந்த மலைப்பாம்பை மீட்டனர்.
ஒடுகத்தூர்:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த மேல் அரசம்பட்டு கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு குடியிருப்புக்குள் சுமார் 12 நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று உணவு தேடி வந்தது.
இதனைக் கண்ட குடியிருப்பு வாசிகள் மலைப்பாம்பை பார்த்து கத்தி கூச்சலிட்டனர். மேலும் கிராம மக்கள் பாம்பை பிடிக்க முயன்றனர். பாம்பு சீரியதால் அனைவரும் பயந்து ஓடினர். இதனையடுத்து மாட்டின் கயிற்றை சிலர் எடுத்து வந்தனர்.
பின்னர் பாம்பு எங்கும் செல்லாதவாறு தலை பகுதியில் கயிற்றால் சுருக்கு முடி போட்டு கட்டி வைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒடுகத்தூர் வன துறையினர் கயிற்றால் கட்டி வைத்திருந்த மலைப்பாம்பை மீட்டனர்.
இதனையடுத்து மலைப்பாம்பை வனத்துறையினர் அருகே உள்ள பரவமலை காப்பு காட்டில் பத்திரமாக கொண்டு போய் விட்டனர்.
மேலும் வனத்துறையினர் கிராம மக்களிடம் பாம்புகளை இதுபோன்று கயிற்றால் கட்டக் கூடாது என்று அறிவுறுத்தி சென்றனர்.
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மலைப்பாம்பை கிராம மக்கள் கயிற்றால் கட்டி வைத்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- டிஜிட்டல் சேவைத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.
- பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 900-க்கும் அதிகமான சமூகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர்:
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான சமூகவியல் மாநாடு தொடங்கியது. மாநாட்டுக்கு வி.ஐ.டி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். அவர் பேசியதாவது:-
கடந்த 20 ஆண்டுகளாக மிகை உலகமயமாக்கலின் விளைவுகளாக அதிக துருவ முனைப்பு, அரசியலின் சீரழிவு போன்றவை பார்க்கப்படுகிறது. இந்த சீரழிவு, பிளவு சில அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் வெற்றி பெற உதவியிருக்கலாம்.
உக்ரைன், காசா போன்ற ஆயுத மோதல்களால் தொலைந்து கொண்டிருக்கும் அப்பாவி உயிர்களைக் காப்பாற்றுவதில் ஐ.நா. போன்ற பெரியநிறுவனங்கள் சிதைவதற்கும் அரசியல்வாதிகளால் வழி வகுத்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம், அதிகரித்து வரும் சமத்துவமின்மை, துருவ முனைப்பு போன்ற சவால்களுக்கு சமத்துவமான சமுதாயத்தை உறுதி செய்வதற்கு சமூகவியலாளர்கள் தீர்வு காண வேண்டும்.
அதிக உலகமயமாக்கல் ஒரு நாட்டில் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே செல்வத்தின் தீவிர ஏற்றத் தாழ்வுக்கு வழிவகுத்துள்ளது. இத்தகைய ஏற்றத் தாழ்வை அரசின் நலத் திட்டங்கள், முன் முயற்சிகளால் மட்டுமே குறைக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வி.ஐ.டி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:-
உலகளவில் இந்தியா 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறியிருப்பது மகிழ்ச்சியளிப்பாக இருந்தாலும், தனி நபர் வருமானத்தில் 139-வது இடத்தில் இருக்கிறது. நாம் விவசாயநிலங்களை இழந்து வருகிறோம். அதை தவிர்க்க வேண்டும்.
அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான வழிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். சமத்துவமின்மையால் இந்தியா மோசமான நாடாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 900-க்கும் அதிகமான சமூகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் இந்திய சமூகவியல் சங்கத் தலைவர் ஆபா சவுஹான், செயலர் மணீஷ் வர்மா, வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த் தசாரதி மல்லிக், பதிவாளர் டி.ஜெயபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- நண்பர்கள் மூலம் தகவல் கிடைத்து பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது.
- விஜயகாந்த் மரண செய்தி கேட்டு பிரேமலதாவின் சொந்த ஊரான செம்பேடு கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
விஜயகாந்த் பிரேமலதாவை 1990-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிரேமலதாவின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள செம்பேடு கிராமம்.
மதுரை திருமங்கலத்தில் பிறந்து முன்னணி நடிகரான விஜயகாந்த் பிரேமலதாவை எப்படி திருமணம் செய்து கொண்டார் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த காலம் விஜயகாந்துக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பெண் பார்க்க தொடங்கினார்கள்.
விஜயகாந்தின் நண்பர்களின் மூலம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கண்ணையா என்பவருக்கு பிரேமலதா என்ற மகள் இருப்பது தெரியவந்தது. அப்போது கண்ணையா ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
அவரது 2-வது மகளான பிரேமலதா பள்ளி படிப்பை ஆம்பூர் சர்க்கரை ஆலை பள்ளியில் முடித்துவிட்டு காட்பாடி ஆச்சிலியம் கல்லூரியில் படிப்பை முடித்திருந்தார்.
நண்பர்கள் மூலம் தகவல் கிடைத்து பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து முதல் பார்வையிலேயே பிரேமலதாவை பிடித்துப்போக விஜயகாந்த் பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார்.
இதன் மூலம் விஜயகாந்த் வேலூரின் மருமகன் ஆனார்.
விஜயகாந்த் மரண செய்தி கேட்டு பிரேமலதாவின் சொந்த ஊரான செம்பேடு கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உறவினர்கள் பலர் சென்னைக்கு குடும்பத்தோடு சென்று அஞ்சலி செலுத்தினார்கள். விஜயகாந்த் மரணத்தால் செம்பேடு கிராமம் சோகத்தில் மூழ்கியது.
செம்பேடு கிராமத்தில் பிரேமலதாவின் குலதெய்வம் கோவிலான முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவிற்கு ஆரம்ப கட்டத்தில் விஜயகாந்த் வந்துள்ளார்.
கடைசியாக 2017-ம் ஆண்டு முனீஸ்வரன் கோவிலை புதிதாக கட்டி கும்பாபிஷேகம் செய்தனர். அந்த விழா விஜயகாந்த் தலைமையில் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செம்பேடு கிராமத்திற்கு வரும்போது எளிமையாக விஜயகாந்த் பழகுவார் என அவரது நினைவுகளை உறவினர்கள் தெரிவித்தனர்.
- 20 பக்க பகவத் கீதை புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறது.
- தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்படுகிறது.
திருப்பதி:
திருப்பதி தேவஸ்தானம் இளைஞர்களுக்காக 20 பக்க பகவத் கீதை புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த பகவத் கீதை தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்படுகிறது.
பகவத்கீதையின் காலத்தால் அழியாத போதனைகள் 20 பக்கங்கள் கொண்ட அச்சிடப்பட்ட பதிப்பின் மூலம் எளிய மொழியில் மாணவர்களுக்குச் சென்றடையும்.
ஒரு லட்சம் புத்தகங்கள் அச்சிட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்களிடையே அவர்களின் தார்மீக மற்றும் ஆன்மீக கல்விக்கு பங்களிக்கும் வகையில் விநியோகிக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.






