என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகொண்டா அருகே சேலம் வியாபாரியிடம் ரூ.5.89 லட்சம் பறிமுதல்
    X

    பள்ளிகொண்டா அருகே சேலம் வியாபாரியிடம் ரூ.5.89 லட்சம் பறிமுதல்

    • பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.
    • உதவி தேர்தல் அலுவலர் முருகன் மற்றும் தேர்தல் தாசில்தார் வேண்டா ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

    ஒடுகத்தூர்:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சோதனை சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகிக்கும் வகையில் வந்த லோடு ஆட்டோவை மடக்கி விசாரணை நடத்தினர். அவர் சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த விஜயன், மாடுவியாபாரி என்பதும் வேலூர் பொய்கையில் நடந்த மாட்டுச் சந்தைக்கு மாடுகள் வாங்க உரிய ஆவணம் இல்லாமல், ரூ.5 லட்சத்து 89 ஆயிரத்து 500 எடுத்து சென்றது தெரியவந்தது.

    பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். உதவி தேர்தல் அலுவலர் முருகன் மற்றும் தேர்தல் தாசில்தார் வேண்டா ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×