என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "arrack"
- சாராயத்திற்கு பெயர் பெற்ற கிராமமாகவும் விளங்கியது.
- போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.
மேல்பட்டி:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மசிகம் ஊராட்சியை சுற்றி சுமார் 9-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
1500-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். பேரணாம்பட்டு வனப்பகுதியை ஒட்டி உள்ள இந்த கிராமத்தின் காப்புக்காட்டில் கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது அமோகமாக நடந்து வந்தது.
சாராயத்திற்கு பெயர் பெற்ற கிராமமாகவும் விளங்கியது. சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதால் போலீஸ் அடிக்கடி இந்த கிராமத்திற்கு ரோந்து வருவார்கள். சாராயம் குடிப்பதற்கும் அறிமுகம் இல்லாத நபர்கள் அதிகளவில் வந்து, செல்வதால் அந்த பகுதி பள்ளி மாணவர்கள், பெண்கள் என அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
மசிகம் ஊராட்சியில் கள்ளச் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி மசிகம் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் கள்ளச்சாராயத்தை ஒழிக்க துரித நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து போலீசார் உதவியுடன் இந்த ஊராட்சியில் சாராயம் விற்பனை செய்து வந்த நபர்கள் அனைவரையும் கைது செய்து, அதனை முற்றிலுமாக ஒழித்தனர்.
மேலும் கிராமத்தில் முழுமையாக சாராயம் ஒழிக்கப்பட்டது என்று பஸ் நிறுத்தத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து அறிவிப்பு பலகை வைத்தனர்.
மசிகம் ஊராட்சியில் சாராயம் குடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறும் நபர்கள் மீது போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக் உத்தரவின்பேரிலும், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அறிவுரையின்படியும், நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். அதில் 110 லிட்டர் சாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் அருண்குமார் (வயது22) என்பதும், காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
பின்னர் போலீசார் அருண்குமாரை கைது செய்து, அவர் கடத்தி வந்த 110 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்