search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல வேண்டும்-கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கோரிக்கை
    X

    கோவில்பட்டியில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல வேண்டும்-கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கோரிக்கை

    • கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., தென்னக ரெயில்வே பொது மேலாளரை சென்னையில் சந்தித்தார்.
    • மனுவினை பெற்றுக்கொண்ட தென்னக ரெயில்வே பொது மேலாளர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    கோவில்பட்டி:

    முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, தென்னக ரெயில்வே பொது மேலாளரை சென்னையில் சந்தித்தார். அப்போது விரைவில் நெல்லையில் இருந்து சென்னை வரை இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயில், கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்றுசெல்ல வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.

    அந்த மனுவினை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த தென்னக ரெயில்வே பொது மேலாளர், கோவில்பட்டி ரெயில் நிலையம் அம்ரீத் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் ரூ. 25 கோடி மதிப்பில் ஒப்பந்தம் நிறைவு பெற்று விரைவில் அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது என்ற தகவலையும் தெரிவித்தார்.

    Next Story
    ×