search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் மூதாட்டிக்கு லிப்ட் கொடுத்து கட்டி அணைத்த தொழிலாளி
    X

    திருச்சியில் மூதாட்டிக்கு லிப்ட் கொடுத்து கட்டி அணைத்த தொழிலாளி

    • சரஸ்வதி (வயது 65). துவாக்குடி பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றார்
    • பஸ்சுக்கு காத்திருந்த சரஸ்வதியிடம் நானும் ஊருக்குத்தான் செல்கிறேன், மோட்டார் சைக்கிளில் ஏறுங்கள், வீட்டில் கொண்டு சென்று விடுகிறேன் என கூறினார்.

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள பிடாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டிச்சாமி மனைவி சரஸ்வதி (வயது 65). இவர் துவாக்குடி பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ஊர் திரும்புவதற்காக துவாக்குடி பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது பிடாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (45) என்பவர் மோட்டார் சைக்கிளில் துவாக்குடி பஸ் நிலையம் பகுதிக்கு வந்தார். பின்னர் பஸ்சுக்கு காத்திருந்த சரஸ்வதியிடம் நானும் ஊருக்குத்தான் செல்கிறேன், மோட்டார் சைக்கிளில் ஏறுங்கள், வீட்டில் கொண்டு சென்று விடுகிறேன் என கூறினார்.

    இதையடுத்து அந்த மூதாட்டி வெள்ளைச்சாமியின் மோட்டார் சைக்கிளில் ஏறினார். பின்னர் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளில் இருந்து சரஸ்வதி இறங்கிய நிலையில் அவரை வெள்ளைச்சாமி கட்டி அணைத்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி கூச்சலிட்டார். உடனே வெள்ளைச்சாமி அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றார். இதுபற்றி துவாக்குடி போலீஸ் நிலையத்தில் சரஸ்வதி புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்திரகுமார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான வெள்ளைசாமியை தேடி வருகிறார்.

    Next Story
    ×