search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவி தூக்கிட்டு தற்கொலை
    X

    மாணவி தூக்கிட்டு தற்கொலை

    • போலீசாருக்கு தெரியாமல் உடலை எரித்ததால் வழக்கு
    • சோமரசம்பேட்டை போலீசார் விசாரணை

    ராம்ஜிநகர்,

    சோமரசம்பேட்டை அருகே உள்ள மல்லியம்பத்து கிராமம் கூட்டுறவு நகர் பகுதியைச் சார்ந்த மணிவேல் மகள் வைஷ்ணவி(வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு நீண்ட நாட்களாக இருந்த வயிற்று வலிக்கு சிகிச்சை ெ பற்று வந்தார்.நேற்று வயிற்று வலி அதிகமாக இருந்ததன் காரணமாக வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த உறவினர்கள், அதே பகுதியில் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதால் ஊரில் உள்ள முக்கியஸ்தர்களை அழைத்து பேசி முடிவு செய்து போலீசாருக்கு தெரியாமல் உடலை சுடுகாட்டுக்கு எடுத்து சென்று தீயிட்டனர்.இது குறித்து தகவல் அறிந்த மல்லியம்பத்து கிராம நிர்வாக அலுவலர், சோமரசம்பேட்டை போலீசாருக்கு அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மாணவியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×