search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்காடு பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
    X

    பாலக்காடு பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

    • பாலக்காடு பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
    • 36 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது

    திருச்சி:

    திருச்சி காஜாபேட்டை, கிருஷ்ணர் கோவில் தெருவில் அமைந்துள்ள பாலக்காடு பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 36 வருடங்களுக்கு பிறகு இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    முன்னதாக கடந்த 9-ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், மகாபூர்ணாஹுதி தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு காவேரியில் இருந்து திருமஞ்சனம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    10-ந்தேதி இரண்டாம் கால யாக பூஜையும், வேத பாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து மகா கும்பாபிஷேக நாளான இன்று காலை 4.30 மணி அளவில் நான்காம் கால பூஜையுடன் வேத விற்பன்னர்கள் யாக சாலையிலிருந்து யாத்திரா தானம் கடத்துடன் புறப்பட்டன. தொடர்ந்து கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்று முழங்கினர்.

    வேத விற்பன்னர்கள் பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர். அதன் பின்னர் கோவிலில் விசேஷ பூஜைகளும், நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாமன்ற உறுப்பினர் மண்டிசேகர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

    Next Story
    ×