search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பச்சைமலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மண்சரிவு - போக்குவரத்து பாதிப்பு
    X

    பச்சைமலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மண்சரிவு - போக்குவரத்து பாதிப்பு

    • பச்சைமலை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
    • வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட பகுதியான எட்டெருமைபாலி அருவியில் செந்தண்ணீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுவது குறிப்பிடத்தக்கது.

    திருச்சி :

    திருச்சி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலா தலமான பச்சைமலையில் தொடர் கனமழை பொழிந்து வருகிறது. உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சைமலை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் மலைவாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மேலும் அங்குள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன.

    உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சோபனபுரத்திலிருந்து வனத்துறைக்கு சொந்தமான டாப்செங்காட்டுப்பட்டி செல்லும் சாலை, சேதமடைந்திருந்த நிலையில், சமீபத்திய தொடர் கன மழையால் மண்சரிவு, சாலையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் சாலை குண்டும், குழியுமாக மாறி சாலை போக்குவரத்துக்கு பெரும் சவாலாக உள்ளது.

    சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள், லாரிகள், பேருந்துகள் அடிக்கடி பழுதாவதுடன் டயர் பஞ்சராகி நடுவழியில் நிற்கும் அவலம் தொடர்கிறது. நேற்று மதியம் டாப்செங்காட்டுப்பட்டி சென்ற அரசுப் பேருந்து நடுவழியில் பஞ்சராகி நின்றதால் போக்குவரத்து, ஒரு மணி நேரம் பாதிப்படைந்ததுடன், மாலைவாழ் பயணிகள் குழந்தைகளுடன், சாலையில் அமர்ந்திருந்தனர்.

    இந்த தொடர் கன மழையால் பச்சைமலையிலுள்ள அருவிகள், காட்டாறுகளில் செந்தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட பகுதியான எட்டெருமைபாலி அருவியில் செந்தண்ணீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுவது குறிப்பிடத்தக்கது. எனவே ஆபத்தை உணர்ந்து அந்த பகுதிகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×