search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எல்.ஐ.சி. ஊழியர்  தற்கொலை
    X

    எல்.ஐ.சி. ஊழியர் தற்கொலை

    • எல்.ஐ.சி. ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    • குடி போதைக்கு அடிமையானதாக தெரிகிறது

    திருச்சி:

    திருவானைக்காவல் கும்பகோணத்தான் சாலை பகுதியை சேர்ந்தவர் இளஞ் செழியன் (வயது 55). இவர் எல்ஐசியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர் குடி போதைக்கு அடிமையானதாக தெரிகிறது. மேலும் இவர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த காரணத்தால் சற்று உடல் தளர்ந்து காணப்பட்டார். இந்த நிலையில் வீட்டில் அறையில் மின்விசிறியில் சேலையில் இளஞ்செழியன் தூக்கில் தொங்கினார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் இளஞ்செழியனை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் இளஞ்செழியன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி ராஜஸ்ரீ ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×