என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாலையில் சென்ற கார் மீது திடீரென விழுந்த மரம்... வங்கி மேலாளர் உயிரிழப்பு
- விபத்து தொடர்பாக கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
- சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழைநீர் வடிகால் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை போரூரில் வசித்து வந்தவர் வாணி கபிலன். ஐஓபி வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் இன்று மாலை தனது தங்கையுடன் காரில் சென்றுகொண்டிருந்தார். கே.கே.நகர் லட்சுமணசாமி சாலையில் சென்றபோது சாலையோரம் உள்ள மரம் திடீரென காரின் மீது விழுந்தது.
இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. காருக்குள் இருந்த வாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தங்கை எழிலரசி மற்றும் கார் டிரைவர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுகிறது. இதற்காக சாலையோரம் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இந்த பள்ளம் அருகே உள்ள மரம் சாய்ந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்