search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
    X

    கோப்புபடம்.

    திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

    • நாச்சிமுத்து என்பவரது வீட்டில் கடந்த 2021-ம் ஆண்டு 2 மர்ம நபர்கள் திருட முயற்சித்தனர்.
    • மணிகண்டன் என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் செங்காட்டு பாளையத்தைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவரது வீட்டில் கடந்த 2021-ம் ஆண்டு 2 மர்ம நபர்கள் திருட முயற்சித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இந்த திருட்டு முயற்சி வழக்கில் மணிகண்டன் என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று போலீசார் அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சேட்டு என்பவரது மகன் ரஹீம் (வயது25) என்பதும், இவர் செங்காட்டு பாளையம் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×