என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
- நாச்சிமுத்து என்பவரது வீட்டில் கடந்த 2021-ம் ஆண்டு 2 மர்ம நபர்கள் திருட முயற்சித்தனர்.
- மணிகண்டன் என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் செங்காட்டு பாளையத்தைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவரது வீட்டில் கடந்த 2021-ம் ஆண்டு 2 மர்ம நபர்கள் திருட முயற்சித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இந்த திருட்டு முயற்சி வழக்கில் மணிகண்டன் என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று போலீசார் அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சேட்டு என்பவரது மகன் ரஹீம் (வயது25) என்பதும், இவர் செங்காட்டு பாளையம் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்