என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உடுமலை பஸ் நிலையத்தில் வாலிபர் திடீர் சாவு
- மணிகண்டன் மதுப்பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
- உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடுமலை :
உடுமலையை அடுத்த உரல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(வயது 69 ).இவர் தனது மனைவி மற்றும் 3 மகன்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.இதில் இளைய மகன்(வயது 33) மதுப்பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.இதனையடுத்து மணிகண்டனை திண்டுக்கல்லில் உள்ள ஒரு போதை அடிமை மீட்பு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர்.ஆனால் சிகிச்சையில் விருப்பமில்லாத மணிகண்டன் அங்கிருந்து வீடு திரும்பியுள்ளார்.
சம்பவத்தன்று இரவு உடுமலை பஸ் நிலையத்தில் படுத்திருந்த மணிகண்டனுக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.போதைக்கு அடிமையான இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்