என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெள்ளகோவிலில் மழை நீரால் இடிந்து விழுந்த வீடு
Byமாலை மலர்26 Nov 2022 9:50 AM GMT
- சுவர் இடிந்து விழும்போது குழந்தைசாமி வீட்டில் இல்லாததால் உயிர் தப்பினார்.
- குளங்கள், தாழ்வான பகுதிகள், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் பகுதியில் கடந்த வாரம் தொடர்ந்து கனமழை பெய்தது இதனால் எங்கு பார்த்தாலும் மழை நீர் தேங்கி நின்றது. குளங்கள், தாழ்வான பகுதிகள், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது.
கடந்த வாரம் பெய்த தொடர் மழையின் காரணமாக வெள்ளகோவில் நகராட்சி 16 வது வார்டு, அழகாபுரி நகரில் வட்டமலை விநாயகர் கோவில் எதிரில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான பழைய வீடு உள்ளது. இந்த வீட்டில் குழந்தைசாமி என்பவர் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை மழை நீர் தேங்கியதால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.சுவர் இடிந்து விழும்போது குழந்தைசாமி வீட்டில் இல்லாததால் உயிர் தப்பினார். வீட்டில் இருந்த அவரது உடமைகள் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதம் அடைந்தன. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X