search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே பொது மருத்துவ சிகிச்சை முகாம்
    X

    மருத்துவ பரிசோதனை அளிக்கப்பட்ட காட்சி.

    பல்லடம் அருகே பொது மருத்துவ சிகிச்சை முகாம்

    • தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களுக்கு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • சித்த மருத்துவ துறையின் சார்பில் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி, பொங்கலூர் வட்டார சுகாதார துறை ஆகியவை இணைந்து நடத்திய, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களுக்கு பொது மருத்துவ முகாம், மாதப்பூர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.

    மாதப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரவேல் தலைமையிலான மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய் மற்றும் காசநோய் கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சித்த மருத்துவ துறையின் சார்பில் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில்,பொங்கலூர் வட்டார நடமாடும் மருத்துவ குழு மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில் குமார், சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் கௌசல்யாதேவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காளீஸ்வரி மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×