search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாநல்லூரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது
    X
    கஞ்சா விற்பனை செய்தவர்களும், அவர்களை பிடித்த காவல்துறை அதிகாரிகள்.

    பெருமாநல்லூரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

    • பெருமாநல்லூர்-ஈரோடு சாலையில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கைப்பைகளில் கஞ்சா மறைத்து வைத்து விற்று வருவது தெரியவந்தது

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் அடுத்த பெருமாநல்லூர்-ஈரோடு சாலையில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, சப் இன்ஸ்பெக்டர்கள் அன்பரசன், உமா மகேஷ்வரி உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ரகசியமான இடத்தில் பதுங்கி இருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள், வைத்திருந்த கைப்பைகளில் கஞ்சா மறைத்து வைத்து விற்று வருவது தெரியவந்தது.

    அவர்கள் ஒடிசாவை சேர்ந்த சுபீர் பாணி(வயது 34), அனாதி தலபெஹெரா(21), சனுஜரான(23) மற்றும் 17 வயதுக்கு உள்பட்ட சிறுவன் என்பதும் தெரிய வந்தது. இது குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×