search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன நிலங்களை ஏலம் எடுக்க விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்புபடம்.

    மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன நிலங்களை ஏலம் எடுக்க விண்ணப்பிக்கலாம்

    • மாவட்ட வருவாய் அலுவலரால் 4.7.2023 அன்று முற்பகல் 11.30 மணிக்கு பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
    • ஏலத்தில் கலந்து கொள்வது தொடர்பாக உரிய படிவத்தில் விண்ணப்பத்தினை 3. 7.2023 ஒப்படைக்கவேண்டும் .

    திருப்பூர் :

    ஈரோடு மாவட்டத்தில் நிதிமோசடியில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புங்கந்துரை கிராமத்தில் உள்ள நிலம் , திருப்பூர் தனியார் ஈமு பார்ம்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நாச்சிபாளையம் கிராமத்தில் உள்ள நிலம் ஏலம், திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான காங்கேயம் வட்டம் நெழலி கிராமத்தில் உள்ள நிலம் ஏலம்விடப்பட உள்ளது.

    மாவட்ட வருவாய் அலுவலரால் 4.7.2023 அன்று முற்பகல் 11.30 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக 2-ம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர், ஏலநிபந்தனைகள் தொடர்பான விபரங்களை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம்,சார் ஆட்சியர் அலுவலகம் ,திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். ஏலத்தில் கலந்து கொள்வது தொடர்பாக உரிய படிவத்தில் விண்ணப்பத்தினை 3. 7.2023 அன்று மாலை5 மணிக்குள் தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்டவருவாய் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும் என திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×