என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய 2 வாலிபர்கள் கைது
- வீட்டை பூட்டி விட்டு வேலை தொடர்பாக வெளியே சென்றார்.
- திருப்பூர் வடக்கு குற்ற பிரிவு போலீசில் புகார் செய்தார்.
திருப்பூர் :
திருப்பூர் வாலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பாபு. இவர் தண்ணீர் பாட்டில் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு வேலை தொடர்பாக வெளியே சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றனர். வீட்டிற்கு திரும்பி வந்த சுரேஷ் பாபு வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது நகை, பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர் திருப்பூர் வடக்கு குற்ற பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் நகை பணத்தை திருடி சென்ற கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூரை சேர்ந்த பிரபு, தேனியை சேர்ந்த முத்துசெல்வம் (28) என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் சுரேஷ் பிரபு வீட்டில் நகை பணத்தை திருடியதை ஒப்புக்கொ ண்டனர் இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்