search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாராயம் விற்ற பெண் கைது
    X

    சாராயம் விற்ற பெண் கைது

    • போலீசாரின் ரோந்து பணியில் சிக்கினார்
    • ஜெயிலில் அடைப்பு

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஈச்சம்பட்டு பகுதியில் நேற்று மாலை உமராபாத் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கதிரின் குட்டை அருகே ஈச்சம்பட்டு எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த சித்ரா (வயது58) என்பவர் சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேலும் இது போன்ற நேற்று பல்வேறு கிராமங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சில சாராய வியாபாரிகள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    Next Story
    ×