search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரத்தில்  ஆசிரியர் மன்றம் சார்பில் முப்பெரும் விழா
    X

    முப்பெரும் விழா நடைபெற்ற போது எடுத்த படம்


    பாவூர்சத்திரத்தில் ஆசிரியர் மன்றம் சார்பில் முப்பெரும் விழா

    • ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா , ஆசிரியர்கள் தின விழா, மன்றம் எழுச்சி விழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
    • நிகழ்ச்சியில் தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி நினைவு பரிசுகள் வழங்கினார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் ஆசிரியர் மன்றம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கீழப்பாவூர் சரகம் சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா , ஆசிரியர்கள் தின விழா, மன்றம் எழுச்சி விழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. பாவூர்சத்திரம் அருகே உள்ள பி.ஆர்.கே. திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்சியில் கீழப்பாவூர் ஒன்றிய ஆசிரியர் மன்றம் தலைவர் ராஜதுரை தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் அண்ணாதுரை, கணேசன், ரவி, சீனிராஜ் என்ற சின்னசாமி, நெல்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆசிரியர் மன்றம் தென்காசி மாவட்ட செயலாளர் தங்கத்துரை வரவேற்றார். செல்வன் தொகுத்து வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி நினைவு பரிசுகள் வழங்கினார். ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் இலா. தியோடர் ராபின்சன், தி.மு.க. ஒன்றிய செல்லாளர் சீனித்துரை கழக வழக்கறிஞர் ஏ.பி. அருள் ஆகியோர் பாராட்டி பேசினர்.

    ஆசிரியர் மன்றம் நிர்வாகிகள் அருள்மணி, இளமதி, இளம்பரிதி சண்முகசிங், அய்யனார், சுந்தரவேல், ராஜசேகர், சீனிவாசகம், ஜெயசிங், ஜெபஸ்தியான், குமரகுருபரன் மகளிர் அணி நிர்வாகிகள் உமா, அருள்மதி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் . ஒன்றிய பொருளாளர் அகஸ்டஸ் ஜாண் நன்றி கூறினார்.

    Next Story
    ×